'டான்செட்' தேர்வு விண்ணப்பங்கள்ஏப்.,1 முதல் 20 வரை வினியோகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 2, 2015

'டான்செட்' தேர்வு விண்ணப்பங்கள்ஏப்.,1 முதல் 20 வரை வினியோகம்


டான்செட்' தேர்வு, வரும் மே மாதம் நடக்கிறது. விண்ணப்பங்கள் வரும் ஏப்.,1முதல் 20ம் தேதி வரை வழங்கப்படும்' என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.முதுகலை இன்ஜி.,- எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., உள்ளிட்ட படிப்புகளுக்கு, பொது நுழைவுத்தேர்வான, 'டான்செட்' மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
ஆண்டுதோறும் இத்தேர்வில் பங்கேற்க, லட்சக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பிப்பது வழக்கம்.இவ்வாண்டுக்கான, 'டான்செட்' தேர்வு, வரும் மே மாதம் நடக்கிறது.

விண்ணப்பங்கள் வரும் ஏப்.,1 முதல் 20ம் தேதி வரை வழங்கப்படும் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. பூர்த்திசெய்த விண்ணப்பங்களை ஏப்., 22க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.மே 16, 17ம் தேதிகளில் தேர்வுகள் நடக்கின்றன. எம்.சி.ஏ.,வுக்கான நுழைவுத்தேர்வு மே16, காலை 10:00 மணி 12:00 மணி வரையும், எம்.பி.ஏ., நுழைவுத் தேர்வு பிற்பகல் 2:30முதல் மாலை, 4:30 மணி வரையும் நடக்கிறது.அதேபோல், எம்.இ., - எம்.டெக்., படிப்புகளுக்கான நுழைவு தேர்வு, மே 17, காலை 10:00 முதல் 12:00 வரை நடக்கும். கடந்த ஆண்டு, 'டான்செட்' தேர்வுக்கு, ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது. இவ்வாண்டு, ஆன்-லைனில் மட்டுமின்றி, நேரடி விண்ணப்பம் பெற்றும் விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி