சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.46 உயர்ந்தது. டீசல் விலையும் ரூ.3.34 அதிகரித்தது.
ஏறுமுகத்தில் டீசல் விலை
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றி அமைத்து வருகின்றன.
பெட்ரோல் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக 10 முறை விலைகுறைந்தது. அதேபோல டீசல் விலையும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து தொடர்ந்து 6 முறை விலை குறைந்தது. கடந்த 15-ந்தேதி நள்ளிரவு நீண்டநாட்களுக்கு பின்னர் முதல் முறையாக பெட்ரோல், டீசல் விலை சிறிதளவு உயர்ந்தது. இப்போது மீண்டும் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.டெல்லியில் நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.18-ம், டீசல் விலை ரூ.3.09-ம் உயர்த்தப்பட்டது.
சென்னையில் ரூ.3.46 உயர்வு
சென்னையை பொறுத்தவரை பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.46 உயர்ந்து, ரூ.59.85-ல் இருந்து ரூ.63.31 ஆனது. டீசல் விலை ரூ.3.34 அதிகரித்து, ரூ.49.58-ல் இருந்து ரூ.52.92 ஆனது.டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.57.31-ல் இருந்து ரூ.60.49 ஆகவும், டீசல் விலை ரூ.46.62-ல் இருந்து ரூ.49.71 ஆகவும் அதிகரித்தன.
கொல்கத்தாவில் பெட்ரோல் விலை ரூ.65.29-ல் இருந்து ரூ.67.92 ஆகவும், டீசல் விலை ரூ.51.54-ல் இருந்து ரூ.54.29 ஆகவும் உயர்ந்துள்ளன.மும்பையில், பெட்ரோல் விலை ரூ.64.81-ல் இருந்து ரூ.68.14 ஆகவும், டீசல் விலை ரூ.53.67-ல் இருந்து ரூ.57.08 ஆகவும் அதிகரித்துள்ளன. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி