5.50 லட்சம் லேப் - டாப் கொள்முதல்: பணியை விரைவுபடுத்த அமைச்சர் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 1, 2015

5.50 லட்சம் லேப் - டாப் கொள்முதல்: பணியை விரைவுபடுத்த அமைச்சர் உத்தரவு


மாணவ, மாணவியருக்கு, இலவச லேப்-டாப் வழங்க, 5.50 லட்சம் 'லேப்-டாப்'கள் கொள்முதல் செய்யும் பணி நடந்து வருகிறது.கடந்த, 2011 - 12ல், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும்கல்லூரிகளில், 8.67 லட்சம் மாணவர்களுக்கு, இலவச, 'லேப்-டாப்'கள் வழங்கப்பட்டன.
அடுத்து, 2012 - 13ல், 7.18 லட்சம்; 2013-14ல், 5.30 லட்சம் மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது.

இதுவரை, 21.15 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். இத்திட்டத்திற்காக, 2,781.75 கோடி ரூபாய்செலவிடப்பட்டுள்ளது. நடப்பாண்டும், அடுத்த ஆண்டும், தலா 5.50 லட்சம், 'லேப்- டாப்'கள் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.நடப்பாண்டுக்கு, 1,100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, 5.50 லட்சம், 'லேப்-டாப்'கள் கொள்முதல் செய்யும் பணி, எல்காட் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இத்திட்டப் பணி குறித்து, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆய்வு செய்தார். அப்போது, கொள்முதல் பணியை விரைவாகமுடித்து, விரைவாக மாணவர்களுக்கு, 'லேப்-டாப்' வழங்க நடவடிக்கை எடுக்கும்படி,அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.இக்கூட்டத்தில், தகவல் தொழில்நுட்ப செயலர் ராமச்சந்திரன், தொழில்நுட்ப கல்வி ஆணையர் பிரவீன்குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி