பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மட்டுமே, முதன்மை கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்படுவர் என கல்வித்துறை அறிவித்துள்ளது.பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்து வருகிறது; வரும் 19ல், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்க உள்ளது.
இத்தேர்வை நடத்துவது குறித்து, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம், உடுமலையில் நடைபெற்றது.
கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது: பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு நடப்பதால்,மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதனால், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மட்டுமே முதன்மை கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்படுவர்.பிளஸ் 2 தேர்வுக்கு இடையே, 10ம் வகுப்பு தேர்வும் நடக்க உள்ளது. எவ்விதகுழப்பத்துக்கும் இடமளிக்காத வகையில், தேர்வு மையங்களில் 2 பொதுத்தேர்வுகளுக்கும், தனித்தனி கட்டுப்பாட்டு அறைகள் அமைத்து பயன்படுத்த வேண்டும்.பிளஸ் 2 தேர்வை போன்றே, இத்தேர்வுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
பத்தாம் வகுப்பு தேர்வுக்கான கண்காணிப்பாளர், துறை அலுவலர் மற்றும் முதன்மை கண்காணிப்பாளர்களின் பட்டியல் வெளியிடப்படுகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி