மத்திய அரசு அலுவலகங்களில் தனியார் நிறுவனங்களான ஜி மெயில் மற்றும் யாஹு மெயில் போன்ற நிறுவனங்களின் மெயில் சேவையை பயன்படுத்தக்கூடாது என்று கடந்த பிப்ரவரி 18-ந் தேதியன்று அனைத்து துறைகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்திய அரசின் இ-மெயில் கொள்கை என்று பெயரிடப்பட்ட அந்த நோட்டீசில், நாட்டின் தொழில்நுட்ப வளங்களை பயன்படுத்துவது குறித்து எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகளின் படி, அரசு தொடர்பான எந்த ஒரு தொடர்புகளையும் 'நிக்' வழங்கும் இ-மெயில் சேவையை மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய அரசு நிறுவனங்களின் கணிணிகள் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.தனியார் இ-மெயில்களான ஜி மெயில் மற்றும் யாஹு மெயில் போன்றவற்றின் சர்வர்கள்வெளிநாடுகளில் உள்ளதால், அதை பயன்படுத்தி அமெரிக்க அரசு இந்திய அரசின் செயல்பாடுகளை வேவு பார்த்தது. இந்த வேவு பார்த்தலை தடுக்கவே தனியார் இ-மெயில்களை பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது. அதே போல் அரசு தகவல்தொடர்பு நெட்வொர்க்கை பயன்படுத்தி, சமூக வலைதளங்களான பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் மிரட்டல், வெறுப்பேற்றுதல், ஆபாசம், அத்துமீறல் போன்ற கருத்துகள்மற்றும் புகைப்படங்கள் வெளியிடுவதை தடுக்கும் பொருட்டும் உயர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி