குழந்தைகள் நலக்குழுக்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதற்காக, தகுதி வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
வரும் 2006ம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) திருத்தப்பட்ட சட்டம் மற்றும் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள இளைஞர் நீதிக் குழுமத்திற்கான சமூகப்பணி உறுப்பினர் மற்றும் குழந்தைகள் நலக்குழுக்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதற்காக தகுதி வாய்ந்த சமூக பணியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.குழந்தைகள் தொடர்பான உடல்நலம், கல்வி அல்லது நலப் பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் தீவிர ஈடுபாடு கொண்டவர்களாக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்கள்35 வயதுக்கு குறையாதவராகவும் 65 வயதை பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும். தற்போது குழந்தைகள் நலக்குழுக்களில் தலைவர் மற்றும் உறுப்பினர்களாக உள்ளவர்களும் மற்றும் இளைஞர் நீதிக்குழுமத்தில் சமூகப் பணிஉறுப்பினராக உள்ளவர்களும் இரண்டாவது பணிக் காலத்திற்காக விண்ணப்பிக்க தகுதி உடையவர்களாவர். எனினும் ஒரு குழு அதிகபட்சமாக இருமுறை மட்டும் வகிக்க தகுதி உடையவர்கள்.
குழந்தைகள் நலக்குழுக்களில் தலைவர் மற்றும் உறுப்பினர் மற்றும் இளைஞர் நீதிக் குழுமத்தில் சமூகப்பணி உறுப்பினராக நியமிக்கப்படுபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.பெண்கள் சம்பந்தப்பட்ட பட்டம், ஊரக வளர்ச்சி, சட்டம் அல்லது மருத்துவம் ஆகிய பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதற்கான விண்ணப்பப்படிவத்தை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தகுதி வாய்ந்தநபர்கள் படிவத்தில் ஆணையர், சமூக பாதுகாப்புத் துறை, எண் 300. புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லீஸ், சென்னை 10 என்ற முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி