"பென்டா' செல்லிடப் பேசிக்கு மக்களிடையே வரவேற்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 29, 2015

"பென்டா' செல்லிடப் பேசிக்கு மக்களிடையே வரவேற்பு


அஞ்சல் நிலையங்களில் விற்கப்படும் "பென்டா' செல்லிடப் பேசிகளுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளதாக மதுரை தலைமை தபால் நிலைய முதுநிலை அதிகாரிஎன். பிரகாஷ் தெரிவித்தார்."பென்டா பாரத்' நிறுவனமும், பிஎஸ்என்எல் நிறுவனமும் அஞ்சல் துறையுடன் இணைந்து பாரத் மொபைல் எனும் செல்லிட பேசி விற்பனையை மதுரை மற்றும் தென் மண்டலங்களில் உள்ள தபால் நிலையங்களில் கடந்த 2 ஆம் தேதி தொடங்கியது.
ரூ.1999 மதிப்புள்ள இந்த செல்லிடபேசியில் கட் செவி அஞ்சல், கேமரா, இணைய வசதி போன்ற பல சேவைகள் உள்ளன. மேலும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களாக இருந்தால் இந்திய அளவில் மற்ற பிஎஸ்என்எல் மொபைல்களுக்கு 1999 நிமிடம் இலவசமாக பேசிக் கொள்ளலாம்.

இதுகுறித்து மதுரை ஸ்காட் ரோட்டிலுள்ள தலைமை தபால் நிலைய முதுநிலை அதிகாரி என். பிரகாஷ் கூறியது:தபால் நிலையங்களில் செல்லிடப்பேசி விற்பனைக்கு மக்களிடையே நல்ல வரவேற்புள்ளது. மதுரையில் உள்ள தலைமை தபால் நிலையங்கள் மற்றும் துணைத் தபால்நிலையங்கள் சேர்த்து மொத்தமாக 19 தபால் நிலையங்களில் செல்லிடப்பேசிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. தொடக்கத்தில் மக்களின் வரவேற்பைப் பொறுத்து விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் 50 செல்லிட பேசிகள் மட்டுமே மதுரையில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டன.இத்திட்டம் தொடங்கிய முதல் வாரத்திலேயே அனைத்து செல்லிடப்பேசிகளும் விற்றுத்தீர்ந்தன. செல்லிடபேசிகள் இருப்பு குறையும் போது சென்னையில் உள்ள மாநிலத் தலைமை அலுவலகத்திற்கு தகவல் அனுப்பப்படும். அங்கிருந்து ஒவ்வொரு மண்டலத்தின்தேவையைப் பொருத்து செல்லிடபேசிகள் அனுப்பப்படும்.மக்களும் இதில் அதிக ஆர்வம் காட்டுவதால் செல்லிடபேசிகளுக்கான முன்பதிவுத் திட்டத்தையும் தொடங்கியுள்ளோம்.

தபால் நிலையங்களில் செல்லிடபேசிகள் இருப்பு குறையும் நேரத்தில் வாடிக்கையாளர்கள் ரூ.500 முன்பணம் செலுத்திவிட்டுச் சென்றால் 5 நாள்களுக்குள் செல்லிடபேசிகள் அளிக்கப்படும் என்றார்.தென்மண்டலங்களில் செல்லிடப்பேசிகள் விற்பனையைத் தொடங்கி 25 நாள்கள் ஆன நிலையில், இதுவரை மதுரையில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட செல்லிடபேசிகள்விற்பனையாகியுள்ளன. தென் மண்டலங்களில் மொத்தமாக 3 ஆயிரத்துக்கும் அதிகமான செல்லிடப்பேசிகள் விற்பனையாகியுள்ளன என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி