தேவகோட்டை பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நாடகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 29, 2015

தேவகோட்டை பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நாடகம்


தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீய விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நாடகமாக நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு சுற்றுச்சுழல் துறை நிதி உதவியுடன் மதுரை வாய்ஸ் தொண்டு நிறுவனம் சார்பாக பிளாஸ்டிக் பைகளின் தீங்குகள் குறித்துமாணவர்களுக்கு விளக்கும் கலை நிகழ்ச்சி நாடகமாக நடத்தி காண்பிக்கப்பட்டது.நிகழ்ச்சியில் வாய்ஸ் டிரஸ்ட்டின் திட்ட மேலாளர் தங்கபாண்டியன் வரவேற்றார்.பள்ளியின் தலைமை ஆசிரியர்லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் .கலை நிகழ்ச்சியின் தொடக்கமாக பறை ஆட்ட நடனம் மற்றும் பாடல் மூலம் சுற்றுச் சுழல் பாதுகாப்பு தொடர்பாக விளக்கப்பட்டது.பின்பு கலைக்குழுவினர் நாடகம் மூலம் பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் வரும் தீமைகள் , பிளாஸ்டிக் பயன்படுத்தாமல் இருக்க வழிமுறைகள் ,பிளாஸ்டிக்கை மறுப்போம்,குறைப்போம்.மறு பயன்பாடு செய்வோம்,மறுசுழற்சி செய்வோம்,மீட்டெடுப்போம் என்பது தொடர்பான கருத்துக்களை வலியுறுத்தி நடித்து காண்பித்தனர்.

நாடகத்தை மாணவ,மாணவியர் ஆர்வமுடன் கை தட்டி சந்தோசமாக கண்டுகளித்தனர்.பிளாஸ்டிக்கை ஒழிப்போம்,சுற்றுச் சுழலை காப்போம் என்பது தொடர்பான உறுதி மொழி அனைவராலும் எடுத்துக் கொள்ளப்பட்டது.நிகழ்ச்சி குறித்து மணிகண்டன்,காயத்ரி,பாக்கிய லெட்சுமி,கீர்த்தியா,சந்தியா,பரமேஸ்வரி,சொர்ணம்பிகா உட்பட பல மாணவ,மாணவியர் பெற்றோர்களிடம் கூறி பிளாஸ்டிக் பைகளை ஒழிப்போம் என உறுதியுடன் தங்களது கருத்துக்களை கூறினர்.நிறைவாக ஆசிரியை செல்வ மீனாள் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி