கணினி ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு: தேர்வு வாரியம் புதிய அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 2, 2015

கணினி ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு: தேர்வு வாரியம் புதிய அறிவிப்பு


கணினி ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு நாளன்று வர இயலாத விண்ணப்பதாரர்கள் அதற்கான தகுந்த ஆதாரங்களுடன் மார்ச் 2 ஆம் தேதி கலந்துகொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர்-செயலர் தண்.வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
உச்சநீதிமன்ற ஆணையின்படி, மாநில வேலைவாய்ப்பு பதிவுமூப்பு அடிப்படையில் 652 கணினி ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் சான்றிதழ் சரிபார்ப்பு பணியை மேற்கொண்டு வருகிறது. எதிர்பாராத காரணங்களால், தங்களுக்கு உரிய சரிபார்ப்பு நாளன்று வர இயலாத விண்ணப்பதாரர்கள் அதற்கான தகுந்த ஆதாரங்களுடன் சான்றிதழ் சரிபார்ப்பு கடைசி நாளான மார்ச் 2 ஆம் தேதி கலந்துகொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி