பொறியியல் தொழில்நுட்பப் படிப்புகளையோ அல்லது டிப்ளமோ படிப்புகளையோ தொலைநிலைக் கல்வி முறையில் வழங்கக் கூடாது என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) எச்சரித்துள்ளது.
தொலைநிலைக் கல்வி கவுன்சில் (டி.இ.சி.) யுஜிசி-இன் கீழ் இப்போது இயங்கி வரும் நிலையில், பொறியியல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை யுஜிசி அனுப்பியிருக்கிறது.
அதில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளதுபோல, எந்தவொரு கல்வி நிறுவனமும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளைத் தவிர வேறு எந்தத் தொழில் படிப்புகளையும் தொலைநிலைக் கல்வி முறையில் வழங்கக் கூடாது.
இளநிலை பொறியியல் பட்டப் படிப்புகள், டிப்ளமோ படிப்புகள், கட்டடக் கலை, நகர திட்டமிடல், மருந்தாளுநர், ஹோட்டல் மேலாண்மை-உணவுத் தொழில்நுட்பம், முதுநிலை மேலாண்மை டிப்ளமோ படிப்பான பி.ஜி.டி.எம். உள்ளிட்ட படிப்புகளை தொலைநிலைக் கல்வி முறையில் வழங்கக் கூடாது.
இதை மீறி இந்தப் படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என யுஜிசி எச்சரித்துள்ளது.
தொலைநிலைக் கல்வி கவுன்சில் (டி.இ.சி.) யுஜிசி-இன் கீழ் இப்போது இயங்கி வரும் நிலையில், பொறியியல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை யுஜிசி அனுப்பியிருக்கிறது.
அதில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளதுபோல, எந்தவொரு கல்வி நிறுவனமும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளைத் தவிர வேறு எந்தத் தொழில் படிப்புகளையும் தொலைநிலைக் கல்வி முறையில் வழங்கக் கூடாது.
இளநிலை பொறியியல் பட்டப் படிப்புகள், டிப்ளமோ படிப்புகள், கட்டடக் கலை, நகர திட்டமிடல், மருந்தாளுநர், ஹோட்டல் மேலாண்மை-உணவுத் தொழில்நுட்பம், முதுநிலை மேலாண்மை டிப்ளமோ படிப்பான பி.ஜி.டி.எம். உள்ளிட்ட படிப்புகளை தொலைநிலைக் கல்வி முறையில் வழங்கக் கூடாது.
இதை மீறி இந்தப் படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என யுஜிசி எச்சரித்துள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி