பதவி உயர்வு பட்டியலில் கல்வி தகுதி இல்லாதவர்கள்: புள்ளியியல் துறையினர் அதிர்ச்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 8, 2015

பதவி உயர்வு பட்டியலில் கல்வி தகுதி இல்லாதவர்கள்: புள்ளியியல் துறையினர் அதிர்ச்சி


புள்ளியியல் துறையில், உரிய கல்வித் தகுதி பெறாதவர்களின் பெயர்கள், புள்ளியியல் அலுவலர் பதவி உயர்வு பட்டியலில் இடம் பெற்றிருப்பதால், பதவி உயர்வுக்காக காத்திருப்பவர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
தமிழக அரசின் புள்ளியியல் துறையில், உதவி ஆய்வாளர், ஆய்வாளர், அலுவலர் என, அடுத்தடுத்த பணியிடங்கள் உள்ளன. இதில், உதவி ஆய்வாளர் பணிக்கு, பொருளாதாரம், கணிதம், புள்ளியியல் பாடங்களில், ஏதேனும் ஒன்றில், பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆய்வாளர் பணிக்கு, நேரடி நியமனம் மற்றும் பணிமூப்பு பெறும் உதவி ஆய்வாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். இது தவிர, கள அனுபவம்,உதவி ஆய்வாளர்களுக்கு இணையான சம்பளம் என்ற அடிப்படையில், துறையின் அமைச்சுப் பணியாளர் பிரிவைச் சேர்ந்த உதவியாளர்களுக்கும், 20 சதவீத பணியிடம் ஒதுக்கப்படுகிறது. ஆனால், அமைச்சுப் பணி உதவியாளராக இருந்து, ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றவர்கள், அலுவலர் பதவி உயர்வு பெற, பொருளாதாரம், கணிதம், புள்ளியியல் பாடங்களில் ஏதேனும் ஒன்றில், பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்பதுசிறப்பு விதி. இந்நிலையில், புள்ளியியல் துறை சார்பில், பிப்., 23ம் தேதி, அலுவலர் பதவி உயர்வுக்கான, 82 பேர் பட்டியல் வெளியானது. அதை பார்த்த ஆய்வாளர் பலர் அதிர்ச்சி அடைந்தனர். அதில், பட்டப் படிப்பு தகுதி பெறாத, 12 பேரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தது தான், அதற்கு காரணம்.

இதுகுறித்து, புள்ளியியல் ஆய்வாளர் வட்டாரத்தில் கூறப்படுவதாவது: பதவி உயர்வு பெற்ற, 12 பேரும், 10ம் வகுப்பு மற்றும் பி.யு.சி., முடித்தவர்கள். அலுவலராக இவர்களுக்கு பதவி உயர்வுக்கு சிறப்பு அனுமதி அளிக்க,அரசுக்கு, புள்ளியியல் துறை கடிதம் எழுதி உள்ளது. அனுமதி அளிக்கப்பட்டால் மட்டுமே, பட்டியலில் சேர்க்க வேண்டும். ஆனால், முன்கூட்டியே பட்டியலில் சேர்த்து உள்ளனர். பட்டப்படிப்பு முடித்த பலர், பதவி உயர்வுக்காக காத்திருக்கும் போது, இவர்களை பட்டியலில் சேர்த்தது அதிர்ச்சியாக உள்ளது.

இவ்வாறு, வட்டாரத்தில் கூறப்படுகிறது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி