நேரடி 2-ஆம் ஆண்டு பாலிடெக்னிக் சேர்க்கை: மே 22 -க்குள் விண்ணப்பிக்கலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 30, 2015

நேரடி 2-ஆம் ஆண்டு பாலிடெக்னிக் சேர்க்கை: மே 22 -க்குள் விண்ணப்பிக்கலாம்


பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க மே 22 கடைசித் தேதியாகும்.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி:
நேரடி இரண்டாம் ஆண்டு பாலிடெக்னிக் சேர்க்கை அடிப்படையில், பிளஸ்-2 தேர்ச்சியுடன், ஐடிஐ தேர்ச்சிபெற்ற மாணவர்கள் தமிழகத்தில் உள்ள 41 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடி இரண்டாம் ஆண்டில் சேர்த்துக் கொள்ளப்படுவர்.சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டரை ஆண்டு செயற்கை அவயங்கள், முடநீக்கியல் பட்டயப் படிப்பு முதலாமாண்டு சேர்க்கை நடைபெறஉள்ளது.

இதற்கு பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.இதுபோல் சென்னை தரமணியில் உள்ள டாக்டர் தர்மாம்பாள் அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடத்தப்படும் ஒரு ஆண்டு ஒப்பனைக் கலை பட்டயப் படிப்பில் முதலாமாண்டு சேர்க்கை நடத்தப்பட உள்ளது. இதற்கும் பிளஸ்-2 முடித்த மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் அவரவர் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள அரசு பாலிடெக்னிக்கில் மே 4-ஆம் தேதி வரை விண்ணப்பங்களை நேரில் பெற்றுக் கொள்ளலாம். அல்லது www.tndte.com என்ற இணையதளத்திலிருந்து மே 4-ஆம் தேதி முதல் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. சாதிச் சான்றை சமர்ப்பித்து விண்ணப்பத்தை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம். பிறர் ரூ. 150 கட்டணம் செலுத்தி விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அந்தந்த பாலிடெக்னிக் கல்லூரியில் சமர்ப்பிக்க மே 22 கடைசித் தேதியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி