270 பைனரி எண்களை நினைவு கூறி ஆசிரியர் கின்னஸ் சாதனை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 5, 2015

270 பைனரி எண்களை நினைவு கூறி ஆசிரியர் கின்னஸ் சாதனை



நீளமான 270 பைனரி எண்களை ஒரே நிமிடத்தில் மனப்பாடம் செய்து நினைவு கூறி,கோவையைச் சேர்ந்த பிரெஞ்ச் ஆசிரியர் கின்னஸ் சாதனை படைத்தார்.கோவையைச் சேர்ந்த பிரெஞ்ச் மொழி ஆசிரியர் அரவிந்த் (36).

கடந்த 2011-ஆம் ஆண்டு ஜெயசிம்ஹா என்பவர் 264 பைனரி எண்களை மனப்பாடம் செய்து ஒரு நிமிடத்தில் அதை நினைவு கூறி படைத்த சாதனையை முறியடிக்க அரவிந்த்,தீவிர பயிற்சி ஈடுபட்டு வந்தார்.இதற்காக கின்னஸ் நிறுவனத்திற்கு அவர் விண்ணப்பித்திருந்தார். அவரது விண்ணப்பம் ஏற்றுக் கொண்டு போட்டிக்கான விதிமுறைகள் அடங்கிய தொகுப்பை கின்னஸ் நிறுவனம் அவருக்கு அனுப்பி வைத்தது.இதற்காக கோவை- அவினாசி சாலையில் உள்ள கஸ்தூரி சீனிவாசன் கலை மையத்தில் கின்னஸ் சாதனை முயற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு கே.எம்.சி.எச். மனநல மருத்துவர் ஸ்ரீனிவாசன், பி.பி.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் பிரகாசம் ஆகியோர் நடுவர்களாகப் பங்கேற்றனர். அப்போது, 270 பைனரி எண்களை சரியாக நினைவு கூறி முந்தைய சாதனையை அரவிந்த் முறியடித்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

ஒரு நிமிடத்தில் 270 எண்களை நினைவு கூர்ந்து சாதனை படைக்க வேண்டும் என்பது எனது விருப்பம். அதற்காக தொடர்ந்து தன்னிச்சையாகப் பயிற்சி எடுத்தேன். படிக்கும் பாடங்களை அடிக்கடி நினைவு கூரும் பழக்கம் சிறு வயது முதலே இருந்து வந்தது. புதிய மொழிகளைக் கற்கும்போதும் அதில் உள்ள வார்த்தைகள், தொடர்களை நினைவில் வைத்து கொள்ளும் பழக்கமும் இருந்ததால் இந்த சாதனையை என்னால் செய்ய முடிந்தது என்றார்.அரவிந்துக்கு பிரெஞ்ச், இத்தாலி, ஸ்பானிஷ் உள்ளிட்ட மொழிகளும் தெரியும். அயல்நாட்டு மொழியைக் கற்றுக் கொடுப்பதற்காக "மெடுஷா' என்ற அகாதெமியை நடத்தி வருகிறார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி