பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச திறனறித் தேர்வு: லிம்ரா நிறுவனம் நடத்துகிறது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 11, 2015

பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச திறனறித் தேர்வு: லிம்ரா நிறுவனம் நடத்துகிறது


மருத்துவப் படிப்பு படிப்பதற்கான கல்வித் திறன் தங்களிடம் உள்ளதா என்பதை பிளஸ் டூ படிக்கும் மாணவ, மாணவிகள் தெரிந்துகொள்ள உதவும் வகையில் இலவச திறனறித் தேர்வு மே 3-ம் தேதி நடக்கவுள்ளது.
இத்தேர்வை நடத்தும் லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷனல் கன்சல்டன்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

தங்கள் பிள்ளைகளை எம்.பி.பி.எஸ். படிக்க வைக்க பெற்றோர்களுக்கும், டாக்டராகும் அசை மாணவர்களுக்கும் உள்ளது. ஆனால், அவர்களிடம் அதற்கான கல்வித் திறன் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள உதவுவதற்காக இலவச திறனறித் தேர்வு நடக்கவுள்ளது.2015 ஆம் ஆண்டில், பிளஸ் 2 தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் இந்த தேர்வை எழுதலாம்.சென்னையில் 6 மையங்களிலும், மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம், திருநெல்வேலி, வேலூர், காரைக்குடி, நாகர் கோவில், கும்பகோணம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒரு மையத்திலும் இத்தேர்வு நடத்தப்படும்.

விருது, பரிசு

தேர்வில் கலந்துகொள்ளும் அனைவருக்கும், சென்னை பாரத் பல்கலைக்கழகமும் லிம்ரா நிறுவனமும் இணைந்து சான்றிதழை வழங்கும்.

தமிழக அளவில் முதல் மதிப்பெண் பெற்ற 10 பேருக்கு, சென்னையில் நடக்கும் விழா ஒன்றில் விருதுகளும், பரிசுகளும் வழங்கப்படும்.www.limratalenttest.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை டவுண்லோட் செய்தோ, ஆன்-லைன் மூலமோ விண்ணப்பிக்கலாம்.

மேலும்விவரங்களுக்கு 9444614353,9444615363, 9445783333 மற்றும் 9445483333 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. மதுரை உயர் நீதிமன்றத்தில் வருகிற 13.04.2015 முதல் 17.04.2015 வரை நமது ஆதிதிராவிடர் பள்ளி, நலத்துறை பள்ளிகளுக்கான பணி நியமனம் பற்றிய வழக்குகள் எதுவும் எதுவும் இடம்பெறவில்லை....

    வழக்கு எண் WP (MD ) 16547/2014 / WP (MD ) 17255 /2014
    நண்பர்கள் யாரேனும் இது பற்றி தெரிந்தால் பதிவிடுங்கள்.........

    ReplyDelete
  2. Comming Monday court number 7 judge leave pola

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி