தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளுக்கு 4362 ஆய்வக உதவியாளர்கள் தேர்வு செய்யப்படுவது எப்படி? பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் விளக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 23, 2015

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளுக்கு 4362 ஆய்வக உதவியாளர்கள் தேர்வு செய்யப்படுவது எப்படி? பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் விளக்கம்


தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பணியாற்ற 4362 ஆய்வக உதவியாளர்கள் தேர்வு செய்யப்படும் முறை பற்றி பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஆய்வக உதவியாளர் பணி

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் உள்ள ஆய்வகங்களில் புதிதாக ஆய்வக உதவியாளர்கள் 4 ஆயிரத்து 362 பேர்களை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது.

இதையொட்டி பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- ஆய்வக உதவியாளர்களை தேர்ந்து எடுப்பதற்காக அரசு தேர்வுகள் இயக்குனரகம் தமிழ்நாடு முழுவதும் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் ஒரே எழுத்துத்தேர்வை நடத்த உள்ளது. அந்த தேர்வின் வினாக்கள் 10-வது வகுப்பு பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேட்கப்படும். அதாவது கொள்குறி வினாக்கள் கொண்ட விடைத்தாள் தயார் செய்து ஓஎம்ஆர் ஷீட் மூலம் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் வகையில் போட்டித்தேர்வு நடத்தப்படும். தேர்வு நடத்தி மதிப்பெண்களின் அடிப்படையில் வரிசைப்படுத்தி 1:5 என்ற விகிதத்தில் தேர்வு எழுதுபவர்களை தேர்ந்து எடுக்கவேண்டும். அந்த தேர்வில் 1:5 என்ற விகிதத்தில் தேர்வு செய்யப்படுபவர்கள், மாவட்ட அளவில் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். 25 மதிப்பெண்கள் நேர்முகத்தேர்வை நடத்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி, தலைமையிடத்து மாவட்ட கல்வி அதிகாரி, சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் ஆகியோரைக்கொண்ட குழு அமைக்கப்படும்.

நேர்முகத்தேர்வில் வழங்கப்படவேண்டிய மொத்த மதிப்பெண்கள் 25 அதன் விவரம் வருமாறு:-

வேலைவாய்ப்பு பதிவு மூப்புக்கு அதிக பட்சம் 10 மதிப்பெண் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 1 ஆண்டு முதல் 2 ஆண்டுகள் முடியகாத்திருப்பவர்களுக்கு 2 மதிப்பெண், 2 ஆண்டு முதல் 4 ஆண்டுகள் முடிய காத்திருப்பவர்களுக்கு 4 மதிப்பெண்கள், 4 ஆண்டு முதல் 6 வருடங்கள் முடிய காத்திருப்பவர்களுக்கு 6 மதிப்பெண், 6 முதல் 8 வருடங்கள் முடிய காத்திருப்பவர்களுக்கு 8 மதிப்பெண், 10 வருடங்களும் அதற்கு மேலும் காத்திருப்பவர்களுக்கு 10 மதிப்பெண்கள் வழங்கப்படவேண்டும். பிளஸ்-2 தேர்ச்சி பெற்றிருந்தால் 2 மதிப்பெண், இளங்கலைபட்டம் மற்றும் அதற்கு மேல் படித்திருந்தால் 3 மதிப்பெண். அனுபவ சான்றுக்கு 2 மதிப்பெண் தனியார் மற்றும் அரசு பள்ளி அல்லது கல்லூரிகளில் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்ததற்கான சான்று இருந்தால் அதற்கு 2 மதிப்பெண் உண்டு. மேலும் நேர்முகத்தேர்வுக்கு 8 மதிப்பெண் உண்டு.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

26 comments:

  1. அடப்பாவிகளா!! இதுக்கு நேரடியாவே பணம் வாங்கிட்டு தான் வேலை போடுவோம்னு சொல்லியிருக்கலாமே....
    உங்க நேர்முக தேர்வுனாலே அது புரோக்கர்கள் மூலமா பணம் விளையாடும் மறைமுக பணமுகதேர்வு தானே!!! போங்கடா நீங்களும் உங்க...........

    ReplyDelete
  2. Oru thavarai maraika palathavarukal

    ReplyDelete
  3. அப்படினா 10 th மட்டும் படிச்சவங்களுக்கு வாய்ப்பே இல்லாமல் போகுமே...நேர்முக தேர்வில்

    ReplyDelete
    Replies
    1. Panam irunthal pothum 10 th theivai illai

      Delete
  4. கல்வித்துறை செயலாளர் அவர்களே அந்த நேர்முக தேர்வு மதிப்பெண்களை அப்படியே இணையத்தில் வெளியிட தயாரா?உங்களால் முடியுமா சொல்லுங்கள்.அப்பொழுது தான் நீங்கள் நேர்மையானவர் என்று நாங்க நம்புவோம்

    ReplyDelete
    Replies
    1. Neirimaikum sabithaukum sammatham illai nanpa

      Delete
    2. Nermai enral ennavenru ketparkal tamilaka kalvithurai seyalalar avarkal

      Delete
    3. Nan munnurimai adippadayil icm listil ullen ethuvarai 6interview vanthirukku athil 2permanent job interview vanthathu athil ethukkume enakku posting order varavillai (forest , transport) permanent postingna panamthan polirukku

      Delete
  5. Pls admin sir SALEM DISTRICT notification publish pannunga....

    ReplyDelete
  6. Salem dt notification scan panni podunga sir pls.

    ReplyDelete
  7. Thiruvannamalai-226
    Vellore-286
    Virudhunagar-154

    ReplyDelete
  8. 5:1 na eppudi......exam eluthura total personla irunthu 5:1 ah or oru idathirrku 5 peru nu edupangala?

    ReplyDelete
  9. Ariyalur 87
    Chennai 33
    Dindigul 96
    Erode 147
    Kanyakumar i94

    ReplyDelete
  10. Madurai 52
    Nagapattinam 138
    Ramanathapuram106
    Nilgiri 81
    Theni 65
    Tirunelveli 106
    Thiruvallur 179
    Tiruppur141
    Viluppuram 317

    ReplyDelete
  11. 5:1 na eppudi......exam eluthura total personla irunthu 5:1 ah or oru idathirrku 5 peru nu edupangala?

    ReplyDelete
  12. Bank account balance தெரிந்து கொள்ள ATM card தேவையில்லை...!கட்டணம் இல்லாமல் இலவசமாக உங்கள் மொபைல் மூலம் எங்கே இருந்தாலும் தெரிந்து கொள்ளலாம்...(your mobile number must be given in your bank account )1. Axis bank-092258922582. Andra bank-092230113003. Allahabad bank-092241501504. Bank of baroda-092230113115. Bhartiya Mahila bank-092124388886. Dhanlaxmi bank-080677477007. IDBI bank-092129933998. Kotak Mahindra bank-180027401109. Syndicate bank-0966455225510. Punjab national bank-1800180222211. ICICI bank-0223025676712. HDFC bank-1800270333313. Bank of india-0223359854814. Canara bank-0928929289215. Central bank of india-0922225000016. Karnataka bank-1800425144517. Indian bank-0928959289518. State Bank of india-Get the balance via IVR1800112211 and 1800425380019. union bank of india-0922300929220. UCO bank-0927879278721. Vijaya bank-1800266555522. Yes bank-09840909000குறிப்பு:account open செய்தபோது தந்த number யிலிருந்து dial செய்தால் 2 ring அடித்து cut ஆகி balance,sms மூலம் வரும், கட்டணம் இல்லை

    ReplyDelete
  13. Friends see www.tamilanguide.in paarunga...school lab assistant kku detail ellam irulku.

    ReplyDelete
  14. ஆதி திராவிடர் வழக்கு ;

    70% நியமனம் (தடை விலகல்)பற்றிய செய்தி செய்திதாளில் வராதது ஏன்?

    அடுத்த ஹியரிங் எப்போது?

    இறுதி விசாரணை/ தீர்ப்பு எப்போது?

    கட் ஆஃப் எவ்வளவு வரும்

    sc -?
    sca-?





    ReplyDelete
  15. same doubt frnd pls yaravathu clear panunga

    ReplyDelete
  16. nan sslc pathivu pannama neradiya +2 pathivu panninen ithunala intha examla future la problem ethuvum varuma? melu nan dted padithirukken atha vuyar kalvi thaguthiya kamikkalama?

    ReplyDelete
  17. i am working BT English in erode dist, Gobi, near sathy i want to mutual to mettur,salem or attur, salem dist. contact 9629820626

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி