தமிழ்நாடு மருத்துவ சேவை ஆட்தேர்வு வாரியம் (டி.என்.எம்.ஆர்.பி.) சமீபத்தில் நர்ஸ் பணிக்கு 7 ஆயிரத்து 243 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதில் 6 ஆயிரத்து 792 இடங்கள் பெண் விண்ணப்பதாரர்களுக்கானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பணிகளுக்கு 1-7-15 தேதியில் 58 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜெனரல் நர்ஸ் (ஆண், பெண்) 3 ஆண்டு படிப்பு படித்தவர்கள், நர்சிங் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் தமிழ்நாடு நர்சஸ் மற்றும் மிட்வைவ்ஸ் கவுன்சிலில் பதிவு செய்தவராகஇருக்க வேண்டும்.
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இணையதள விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். எஸ்.சி.,எஸ்.சி.-ஏ, எஸ்.டி. பிரிவினர் ரூ.300-ம், மற்றவர்கள் ரூ.600-ம் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.விரிவான விவரங்களை www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு, 11-5-15-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி