புதுடில்லி: இபிஎப்ஓவின் புதிய ஓய்வூதியதிட்டம் தற்காலி்கமாக நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. இது குறித்து அவ்வமைப்பு தெரிவித்திருப்பதாவது:
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வரும் ரூ.ஆயிரம் என்ற புதிய திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் துவக்கப்பட்டது. இந்த திட்டத்தால் சுமார் 32 லட்சம் பயனாளிகள் பயன்பெற்று வந்தனர். இந்த திட்டம் கடந்த மார்ச் மாதம் 31-ம் தேதியுடன் முடிவடைந்ததையடுத்து மேற்கொண்டு தொடர்வது குறித்து அரசிடம் இருந்து எந்தவிதமான தகவலும் வரவில்லை. ஆகையால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.என தெரிவித்துள்ளது. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 19-ம் தேதி அரசு வெளியி்ட்டுள்ள அறி்க்கை ஒன்றில் குறைந்த பட்ச ஓய்வூதிய திட்டம் செப்.,1-ம் தேதி முதல் மார்ச் 2015 வரை மட்டுமே கிடைக்கும் என மத்திய அரசு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய ஒய்வூதியம் தற்காலிகமாக நிறுத்தபட்ட போதிலும் வழக்கமான ஒய்வூதிய பலன் கிடைப்பதில் எவ்வித சிரமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி