மாணவரின் இதயம் காக்க நிதி திரட்டும் ஆசிரியர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 27, 2015

மாணவரின் இதயம் காக்க நிதி திரட்டும் ஆசிரியர்



திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஒடுகம்பட்டியில் சஞ்சீவி, 11, என்ற மாணவரின் இருதய சிகிச்சைக்கு பள்ளி ஆசிரியர் கணேசன் நிதி திரட்டி வருகிறார்.நத்தம் அருகே ஒடுகம்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா. மனைவி சின்னம்மாள். இருவரும் கூலி தொழிலாளிகள்.
இவர்களது மகன் சஞ்சீவி. அங்குள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கிறார். ஓராண்டுக்கு முன் உடல்நலம் பாதிக்கப்பட்டது. மருத்துவ பரிசோதனையில் இதய வால்வில் அடைப்பு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.
மாணவனின் குடும்பச்சூழலை அறிந்து, அப்பள்ளி ஆசிரியர் கணேசன், மருத்துவ சிகிச்சைக்காக நிதி திரட்டி வருகிறார்.அவர் கூறியதாவது:- சிறுவயது முதல் வறுமையில் வாழ்ந்து தற்போது ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். அதனால் மருத்துவ சிகிச்சை, படிப்பு, வறுமையில் வாடும் மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறேன். தற்போது வறுமையில் வாடும் சஞ்சீவியின் மருத்துவ சிகிச்சைக்காக நண்பர்களிடம் நிதி திரட்டி வருகிறேன் என்றார்.


நீங்களும் உதவ 95854 45276ல் தொடர்பு கொள்ளலாம்.

1 comment:

  1. puttapparthy(andhra Pradesh) sri sathya sai hospital la full check up plus operation ,accommodations yellam free. Sir neengal andha maanavanai angu azhaithu sendral annaithum nalla padiya mudium.hsptl ah nalla service pandranga.once upon a time n oda husband andha hsptl ah work panninar.so adhanala nan soldren.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி