சம்பளம் கிடைக்காமல் பள்ளி ஆசிரியர்கள் அவதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 9, 2015

சம்பளம் கிடைக்காமல் பள்ளி ஆசிரியர்கள் அவதி


அன்னுார் ஒன்றியத்தில், ஏப்ரல் 8ம் தேதியாகியும், மார்ச் மாத சம்பளம் வழங்கப்படாததால், ஆசிரியர்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.அன்னுார் தாலுகா அமைக்கப்பட்டு, இரண்டரை ஆண்டு ஆகி விட்டது. ஆனால், இதுவரை கருவூலம் ஏற்படுத்தப்படவில்லை.
மேட்டுப்பாளையம் தாலுகா கருவூலத்தில்தான் அன்னுார் தாலுகாவை சேர்ந்த ஊழியர்களின் சம்பள பட்டியல்கள் வழங்கப்படுகின்றன. இந்த மாதம்முதல் 'இபே' முறை செயல்படுத்தப்படுகிறது. அன்னுார் ஒன்றியத்தில், 75 துவக்கப்பள்ளிகளும், 15 நடுநிலைப்பள்ளிகளும் உள்ளன. 270 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.மார்ச் மாத சம்பளத்திற்கான பட்டியல், உதவி தொடக்க கல்வி அலுவலர் அலுவலகத்திலிருந்து, மேட்டுப்பாளையம், கருவூலத்திற்கு அனுப்பி, ஒரு வாரமாகி விட்டது. ஆனால், 8ம் தேதி வரை சம்பளம் வழங்கப்படவில்லை. கருவூலத்தில்விசாரித்தால், எப்போது சம்பளம் வழங்கப்படும் என உறுதியாக தெரிவிக்க மறுக்கின்றனர். இதனால் ஆசிரியர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி