"உரிய ஆவணங்கள் இருந்தால், உயர் கல்வி படிப்பதற்காக வங்கிகளில் எளிதில் கல்விக் கடன் பெற முடியும்" என மதுரை ஸ்டேட் வங்கி உதவிப் பொதுமேலாளர் விருத்தாசலம் தெரிவித்தார்.மதுரையில் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் 'கல்விக் கடன்' குறித்து அவர் பேசியதாவது:
நாட்டின் வலிமையை நிர்ணயிப்பது கல்வி. பணம் இல்லை என்பதற்காக ஒரு மாணவருக்கு கல்வி தடைபடக் கூடாது என்பதால் வங்கிகள் மூலம் கல்விக் கடன் வழங்கப்படுகிறது. இதில் 26 வகையான பொதுத்துறை வங்கிகள் தான் அதிக கல்விக் கடன் வழங்குகின்றன. அனைத்து வகை யு.ஜி., பி.ஜி., படிப்புகளுக்கும் கடன் பெறலாம். படிக்கும் கல்லூரி உரிய அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். பொறியியல் படிப்பிற்கு ரூ.2 முதல் ரூ.4 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.
உள்நாட்டு படிப்புகளுக்கு அதிகபட்சம் ரூ.10 லட்சம்,வெளிநாட்டில் படிக்க அதிகபட்சம் ரூ.30 லட்சம் வரை கடன் அளிக்கப்படுகிறது. ரூ.4 லட்சம் வரையான கடனுக்கு பெற்றோர் உத்திரவாதம் தேவையில்லை. சிறப்பு பிரிவின் கீழ் ரூ. 8 லட்சம் வரை கடன் பெற்றால் 5 சதவீதம் முன்பணம் செலுத்தவேண்டும். வெளிநாட்டு படிப்பு என்றால் 15 சதவீதம் பணம் செலுத்த வேண்டும். படிப்பு முடிந்து ஓராண்டில் கடனை திருப்பி செலுத்த வேண்டும். வங்கிகளுக்குள் வட்டி விகிதம் மாறுபடும். மாணவிகளுக்கு அரை சதவீதம் வட்டி தள்ளுபடி உண்டு. பத்து ஆண்டுகளுக்குள் கடனை திரும்ப செலுத்த வேண்டும். வங்கிகள் கேட்கும் ஆவணங்கள் சரியாக இருந்தால் எளிதில் கல்விக் கடன் பெறலாம் என்றார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி