மாணவர்களுக்கு 'சீட்' மறுப்பு: நான்கு பள்ளிகள் மீது வழக்கு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 7, 2015

மாணவர்களுக்கு 'சீட்' மறுப்பு: நான்கு பள்ளிகள் மீது வழக்கு


பெங்களூரு: கல்வி உரிமை சட்டத்தில் மாணவர்களுக்கு, 'சீட்' கொடுக்க மறுத்த, நான்கு கல்வி நிலையங்கள் மீது, முதன்முறையாக வழக்கு பதிவாகியுள்ளது.

தனியார் பள்ளிகளில், கல்வி உரிமை சட்டத்தில், 1.11 லட்சம் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. முதல் சுற்றில், 81 ஆயிரத்து 536 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இரண்டாவது சுற்று, இன்னும், 10 நாட்களில் துவங்கவுள்ளது. கல்வி உரிமை சட்டத்தின் கீழ், மாணவர்களை சேர்க்க மறுத்ததற்காக, எட்டு பள்ளிகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது. இதற்கிடையில், கல்வி உரிமை சட்டத்தில் இடஒதுக்கீடு செய்ய மறுத்ததற்காக, நான்கு பள்ளிகள் மீது, லோக் ஆயுக்தா வழிகாட்டுதலின்படி, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அச்சிவ் ஸ்கூல் ஆப் எஜுகேஷன் செயலர் பவன் கூறியதாவது: நாங்கள் மைனாரிட்டி பிரிவில், எங்கள் பள்ளிகளை சேர்க்க விண்ணப்பித்துள்ளோம். கல்வித்துறை அதிகாரிகள், எந்த முடிவையும் தெரிவிக்காமல், கடந்தாண்டு செப்டம்பர் முதல் இழுத்தடிக்கின்றனர். இதுகுறித்து, ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், அந்த உத்தரவையும் எதிர்பார்த்து உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி