விடைத்தாள் மதிப்பீடு ஊதியத்தை உயர்த்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 10, 2015

விடைத்தாள் மதிப்பீடு ஊதியத்தை உயர்த்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை


பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு கூடுதல் தொகை வழங்க வேண்டும் என தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் வாயிற் கூட்டம் கோவை நிர்மலா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலர் எம்.கனகராஜன் வரவேற்றார். மாவட்டத் தலைவர் ஜி.ஆர்.செந்தூரன் தலைமை வகித்தார்.மாநிலப் பொருளாளர் எம்.ஜம்பு சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது, தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு கற்பிக்கும் பணியைக் காட்டிலும் கூடுதலாக அரசின் நலத் திட்டங்களை நிறைவேற்றும் பணி வழங்கப்படுகிறது. இதனால் ஆசிரியர்களும், மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.எனவே, ஆசிரியர்கள் கற்பிக்கும் பணிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு தாள் ஒன்றுக்கு ரூ.7.50 மட்டுமே வழங்கப்படுகிறது. இதை ரூ.20 ஆக உயர்த்திக் கொடுக்க வேண்டும். இதுதொடர்பாக கல்வித்துறை இயக்குநரிடம் ஏற்கெனவே மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், கூடுதல் தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இரவு 8 மணி வரையிலும் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்களுக்கு பயணப் படி வழங்கவும் உத்தரவிட வேண்டும் என்றார் அவர்.சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் எல்.சிவக்குமார், நிர்வாகிகள் எம்.மைக்கேல்ராஜ், என்.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள், ஆசிரியர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி