பொதுவாக, பணியில் சேரும் ஆசிரியர்களின் அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்களையும் தனியார் பள்ளி நிர்வாகங்கள் வாங்கி தங்கள்வசம் வைத்துக்கொள்கின்றன. இதுபற்றி கேட்டபோது, மெட்ரிகுலேஷன் கல்வி இயக்கக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பணியில் சேரும்போது அசல் சான்றிதழ்களை ஆய்வுசெய்துவிட்டு சான்றொப்பம் (அட்டஸ்டேஷன்) பெறப்பட்ட நகல்களை வைத்துக்கொள்ளலாம்.
மற்றபடி, ஆசிரியர்களின் அசல் கல்விச்சான்றிதழ்களை வாங்கி வைத்துக்கொள்ள பள்ளி நிர்வாகங்களுக்கு அதிகாரம் இல்லை. இதுபோல, அசல் சான்றிதழ்களை வாங்கி வைத்துக்கொள்ளும் பள்ளி நிர்வாகங்கள் பற்றி மாவட்ட கல்வி அதிகாரி, மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர், உதவி தொடக்கக் கல்வி அதிகாரி போன்ற அதிகாரிகளிடம் புகார் செய்தால் தக்க நடவடிக்கை எடுப்பார்கள்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி