தமிழ்நாட்டில் புதிதாக 30 பி.எட்., கல்லூரிகள் தொடங்க அனுமதி கேட்டு விண்ணப்பம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 8, 2015

தமிழ்நாட்டில் புதிதாக 30 பி.எட்., கல்லூரிகள் தொடங்க அனுமதி கேட்டு விண்ணப்பம்


தமிழ்நாட்டில் இந்த கல்வியாண்டில் புதிதாக 30 பி.எட். ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் தொடங்க அனுமதி கேட்டு பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்துள்ளனர்.பி.ஏ., பி.எஸ்.சி. பட்டப்படிப்பு படித்து முடித்தவர்கள் உடனே பி.எட் ஆசிரியர்கள் பயிற்சியை தேர்வு செய்வார்கள்.

இந்த பயிற்சியை முடிந்தால்தான் நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் பணியாற்ற முடியும்.மேலும், தற்போது தகுதித்தேர்வில் வெற்றி பெற்றால்தான் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி என்ற நிலை உள்ளது. அதனால் பி.எட் படிக்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக பெண்கள் ஆசிரியர் பயிற்சியை அதிகளவு விரும்பி வருகின்றனர்.தமிழகத்தில் 21 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவை தவிர தனியார் சுயநிதி கல்வியியல் கல்லூரிகள் 668 உள்ளன.இந்த கல்வியாண்டில் மேலும் 30 பி.எட் கல்லூரிகள் தொடங்க அனுமதி கேட்டு உள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் தெரிவித்தார்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி