மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த வாரம் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்வெளியானது. மொத்தம் 11 லட்சம் பேர் எழுதிய இந்த தேர்வில் 49.7 சதவீதமாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். மீதமுள்ள 50.3 சதவீத மாணவர்கள் தேர்வில் தோல்வியடைந்துள்ளனர்.கல்வித்துறையில் கடந்த 4 ஆண்டுகளாகவே இந்த அவலம் தொடர்ந்து வருகிறது.
2011-ம் ஆண்டு 55 சதவீதம் பேரும், 2012-ல் 51.19 சதவீதம் பேரும், 2013 மற்றும் 14-ம் ஆண்டுகளில் 47.74 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சியடைந்தனர். 1-ம் வகுப்பிலிருந்து 8-ம் வகுப்பு வரை அனைவரையும் தேர்ச்சியடையச் செய்வதாலே 10-ம் வகுப்பில் இவ்வளவு பேர் தோல்வியடைவதாக ஆசிரியர்கள் குறை கூறுகிறார்கள். மோசமான தேர்வு முடிவுகளின் எதிரொலியாய், மத்திய பிரதேசத்தில் 50 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதும் 60 ஆயிரம் ஒப்பந்த ஆசிரியர்கள் தினசரி சம்பள அடிப்படையில் வேலை செய்வதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி