கோவையில் 14 பள்ளிகள் அதிரடியாக மூடல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 1, 2015

கோவையில் 14 பள்ளிகள் அதிரடியாக மூடல்!


கோவையில், அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டதாக, 14 தனியார் பள்ளிகளை மூட, பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில், அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வரும் பள்ளிகள், மூடப்பட்டு வருகின்றன.
கோவை மாவட்டத்தில், மூன்று ஆண்டுகளில், 93 பள்ளிகள் அங்கீகாரம் பெறாத காரணத்தால் மூடப்பட்டு உள்ளன. நடப்பு கல்வியாண்டில், 319 பள்ளிகளுக்கு முதற்கட்டமாக, எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பின்பும், அங்கீகாரம் பெற முயற்சிக்காமல் இருந்த, 14 பள்ளிகள் மூடப்பட உள்ளதாகவும், சிறு குறைபாடுகளுடன் அங்கீகாரம் புதுப்பிக்காமல் உள்ள, 18 பள்ளிகளுக்கு, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாகவும், கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி