இன்று பிளஸ் 2 'ரிசல்ட்': தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 7, 2015

இன்று பிளஸ் 2 'ரிசல்ட்': தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு



பிளஸ் 2 தேர்வு முடிவுகள், இன்று காலை வெளியாகிறது. கடந்த ஆண்டை விட, தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும் என்று தெரிகிறது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 5ல் துவங்கி, 31ம் தேதி முடிந்தது; தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 8.43 லட்சம் பேர் எழுதினர். இன்று காலை 10:00 மணிக்கு, முடிவுகள் வெளியாகிறது. கடந்த ஆண்டு, பிளஸ் 2 தேர்வில், 90.6 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்; 2013ல், 88.1 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்; இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம், 94 சதவீதம் வரை எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக, தனியார் பள்ளி மாணவ, மாணவியரே மாநில, 'ரேங்க்' பிடித்து வருகின்றனர். இந்த ஆண்டாவது, அரசுப் பள்ளி மாணவ, மாணவியர், மாநில 'ரேங்க்' பெறுவார்களா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.



தற்காலிக சான்றிதழ் எப்போது:





இந்த ஆண்டு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் அறிமுகமாகிறது. தலைமை ஆசிரியரால் பதிவிறக்கம் செய்யப்பட்ட, தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, தங்கள் பள்ளிகளில், வரும் 14ம் தேதி முதல், மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம். தனித்தேர்வர்கள், தேர்வு மைய தலைமை ஆசிரியர் மூலம் பதிவிறக்கம் செய்யலாம். வரும் 18ம் தேதி முதல், www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், தங்கள் பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து, தாங்களே பதிவிறக்கம் செய்யலாம்.

www.tnresults.nic.in

www.dge1.tn.nic.in

www.dge2.tn.nic.in

www.dge3.tn.nic.in

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி