அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேரும் நிரபராதிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.தீர்ப்பு விவரம் குறித்து மூத்த வழக்குரைஞர் ஒருவர் பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் நிரபராதிகள் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.குற்றச்சாட்டு மீது அரசு தரப்பு சாட்சியங்கள் ஏற்றுக் கொள்ளத் தக்கதாக இல்லை. குற்றச்சாட்டுகள் மீது ஜெயலலிதா தரப்பு கொடுத்த பதில் விவரங்களை ஏற்றுக் கொண்டுஅவர்களை நீதிபதி விடுதலை செய்துள்ளார்.சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்படுவதால், உடனடியாக அவர்கள் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொள்ளலாம்.அவர் முதல்வராக பதவியேற்றுக் கொள்ள எந்த தடையும் இல்லை. அதுதான் சட்டத்தின் மூலம் ஏற்படும் நிலை என்று மூத்த வழக்குரைஞர் விளக்கமாகக் கூறினார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி