ஆய்வக உதவியாளர் தேர்வு: விண்ணப்பிக்க இன்றே கடைசி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 6, 2015

ஆய்வக உதவியாளர் தேர்வு: விண்ணப்பிக்க இன்றே கடைசி

அரசு பள்ளிகளில், 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள். நேற்று மாலை வரை,
தமிழகம் முழுவதும், 7.30 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இன்றே கடைசி நாள் என்பதால், கடந்த இரு தினங்களாக, தேர்வுத் துறை சேவை மையங்களில், கட்டுக்கடங்காத கூட்டம் உள்ளது. ஆங்காங்கே போலீசார் உதவியுடன் கூட்டத்தினரை ஒழுங்குபடுத்தி, விண்ணப்பங்கள் பதிவு செய்யப்
படுகின்றன.
காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார், கோவை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பல மாவட்டங்களில், சேவை மையங்களுக்கு வரும் விண்ணப்பதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, ஒழுங்கு
படுத்தப்படுகின்றனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், டோக்கனை பலர் விற்றதால், 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகலில், 'சீல்' வைத்து டோக்கனாக வழங்கப்பட்டது. 

கூட்டத்தை சமாளிக்கவும், விண்ணப்பிக்க விரும்புவோருக்கு வாய்ப்பளிக்கும் வகையிலும், இன்று மாலை வரை, அனைவருக்கும் விண்ணப்பம் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு டோக்கன் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இன்று விண்ணப்பம் பெற்றவர்கள் கூட்ட நெருக்கடியால், இன்று மாலைக்குள் பதிய முடியாவிட்டால், அவர்கள் நாளைக்கும் சேவை மையத்துக்கு வந்து, புகைப்படம் எடுத்துப் பதிவு செய்யலாம்.

ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க, வேலைவாய்ப்பு பதிவு எண், அட்டை நகல் வேண்டும் என்பதால், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதியாதவர்களும், அட்டையை புதுப்பிக்காதவர்களும், நேற்று ஒரே நாளில் வேலைவாய்ப்பு புதுப்பிப்பு பணியை, 'ஆன்லைனில்' மேற்கொண்டனர். இதனால், சர்வரில் கோளாறு ஏற்பட்டு, இணையதளம் முடங்கியது.
இதையடுத்து, வேலைவாய்ப்பு பதிவு மற்றும் புதுப்பிப்பு அவசரமாக செய்ய வேண்டியதில்லை; புதுப்பிக்காதவர்களும், பதியாதவர்களும் முதலில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். பின், பதிவு அல்லது புதுப்பிப்பு செய்து அதன் விவரங்களை எழுத்துத் தேர்வுக்கு பின் தாக்கல் செய்யலாம் என்று, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.இதனால், 10ம் வகுப்பு முடித்த அனைவரும், வேலைவாய்ப்புக்கு காத்திருக்காமல் விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.-

1 comment:

  1. PG TRB TAMIL:முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவரா?
    உங்களுக்கு வெற்றி நிச்சயம் !

    முதுகலை தமிழாசிரியர் தேர்வுக்கு தருமபுரியில் பயிற்சி மற்றும் வழிகாட்டு மையம்

    முதுகலை தமிழாசிரியர் ஆசிரியர் போட்டித் தேர்வுக்குஇப்பொழுதிருந்தே தயாரவது உங்களது வெற்றியை உறுதிப்படுத்தும்!

    அடுத்த கல்வியாண்டுக்கான முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்குஇப்பொழுதிருந்தே தயாரவது உங்களது வெற்றியை உறுதிப்படுத்தும். முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவரா நீங்கள்...சரியான வழிகாட்டுதல் இல்லாததால் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவரா ? உங்களுக்கு வெற்றி நிச்சயம் !
    முதுகலை தமிழாசிரியர் தேர்வுக்கு தருமபுரியில் பயிற்சி மற்றும் வழிகாட்டு மையம் வழிகாட்டுதலுடன் சிறந்த பயிற்சிவழங்கப்படும்.

    சென்ற முதுகலை தமிழாசிரியர் தேர்வில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவர்களுக்கு உதவும்வகையில் அலகுவாரியாக பயிற்சி மற்றும் தேர்வுகள் நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது. சென்ற 2014 முதுகலை தமிழாசிரியர் தேர்வில் 85 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் இதில் பங்கேற்கலாம்.ஏற்கனவே பாடத்திட்டத்தை ஒட்டி பாடப்பகுதிகளை முழுமையாகபடித்துமுடித்து தங்கள் இல்லத்திலிருந்தோ அல்லது குழுவாக படித்து தேர்வுக்கு தயாராகுவோரும் இப்பயிற்சி மற்றும்தேர்வுமுறை மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும். தேர்வுக்குப்பின் வினாவிடை அலசல்,தொடர்புடைய தேர்வில்
    எதிர்பார்க்கப்படும் வினாக்கள் போன்றவை விவதிக்கப்படும். தமிழ் தவிர உளவியல் பொது அறிவு பகுதிகளுக்கும் பயிற்சி உண்டு.

    இதுவரை இத்திட்டத்தில் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவ 50 க்கும் மேற்பட்டோர் இப் பயிற்சியில் சேர்ந்து போட்டித்தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். பயிற்சியில் இணைந்தவர்களுக்கு உடனடியாகப் பாடப்பொருள் அனுப்பப்படும் முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவர் நீங்களென்றால் உங்களுக்கு வெற்றி நிச்சயம் !

    தற்போது....

    அலகு 6 -சங்கம்- பாட்டும் தொகையும்-சங இலக்கிய சிறப்புகள்-அரசர்கள்-புலவர்கள் பகுதிக்கான விரிவான பயிற்சி, நினைவுக்குறிப்புகள், தேர்வு - தேர்வுக்கு பிந்தய பின்னூட்டம் ஆகியவை நிறைவுற்றுள்ளது

    (வினாத்தாள் 1 வெளியிடப்பட்டுள்ளது)

    (05.05.2015) முதல் அலகு 7 க்கான பயிற்சி தொடங்கி நடைபெற்று வருகின்றது
    நீங்களும் இணையுங்கள்
    கடின உழைப்பும்..இலக்கை அடையும் வரை ஓயமாட்டேன் எனும் மன உறுதியுடையவர்கள் மட்டும் தொடர்பு கொள்க.
    வெற்றி- 7598299935

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி