ஐந்தாண்டு சட்டப் படிப்பு விண்ணப்ப விநியோகம்: தேதி விரைவில் அறிவிக்கப்படும் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 12, 2015

ஐந்தாண்டு சட்டப் படிப்பு விண்ணப்ப விநியோகம்: தேதி விரைவில் அறிவிக்கப்படும்


ஐந்தாண்டு சட்டப் படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பம் அச்சடிப்பில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, விண்ணப்ப விநியோகம் தடைப்பட்டுள்ளது. விநியோகிக்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என சட்டப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஆற்றல்சார் பள்ளியில் வழங்கப்படும் பி.ஏ.-எல்.எல்.பி. (180), பி.காம்.-எல்.எல்.பி. (120), பி.சி.ஏ.- எல்.எல்.பி (60), பி.பி.ஏ.-எல்.எல்.பி. (60) ஆகிய ஒருங்கிணைந்த ஐந்தாண்டு சட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் மே 8-ஆம் தேதி தொடங்கப்படும் என பல்கலைக்கழகம் முன்னர் அறிவித்திருந்தது.பின்னர், தவிர்க்க முடியாத நிர்வாகக் காரணங்களால் ஐந்தாண்டு சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பம் மே 11-ம் தேதி முதல் விநியோகிக்கப்படும் என பல்கலைக்கழகம் அறிவித்தது.இந்த நிலையில் திங்கள்கிழமையன்றும் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படவில்லை.

இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகிகள் கூறியது:விண்ணப்பம் அச்சடிப்பில் ஏற்பட்ட பிரச்னையே, விண்ணப்ப விநியோகம் தொடர்ந்து தடைபடுவதற்குக் காரணம்.விண்ணப்பங்கள் பிழைகள் திருத்தம் செய்து வந்தவுடன், விநியோகம் தொடங்கப்பட்டு விடும். விரைவில் விநியோகிக்கும் தேதியும் அறிவிக்கப்படும் என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி