இந்த ஆண்டுக்கான (2015-16) இளங்கலை மீன்வள பட்டப் படிப்பு (பி.எஃப்.எஸ்சி) மற்றும் மீன்வள பொறியியல் (பிஇ) படிப்பு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப் பினை தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் வெளியிட்டிருக் கிறது.
அதன்படி, மீன்வள படிப்பு களுக்கு இன்று (திங்கள்கிழமை) காலை 10 மணி முதல் பல்கலைக் கழகத்தின் இணையதளத்தின் (www.tnfu.ac.in) மூலம் ஆன் லைனில் விண்ணப்பிக்கலாம். (தாள் வடிவிலான விண்ணப்பம் வழங்கப் படாது).விண்ணப்பக் கட்டணம் ரூ.600. எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு ரூ.300 மட்டும். கட்டணத்தை ஆன்லை னிலேயே செலுத்தி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தையும் ஆன்லைனிலேயே சமர்ப்பித்துவிட வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 17-ம் தேதி மாலை 5 மணி வரை. மாணவர் சேர்க்கை தொடர்பான முழு விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் மாணவர்கள் தெரிந்து கொள்ள லாம். மேலும், கூடுதல் விவரங்கள் தேவைப்பட்டால் 04365-240558 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம் என்று தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி