ஓய்வூதியதாரர்கள் கருவூலத்தில் சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழில், சுய சான்றொப்பம் அளித்தால் போதும்' என, அரசு அறிவித்துள்ளது.தமிழக அரசிடம், ஓய்வூதியம் பெறுவோர், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர், 'வேலையில்இல்லை, மறு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது, மறுமணம் செய்யவில்லை, திருமணமாகவில்லை' என்பது போன்ற விவரங்களை, முறையான விண்ணப்பத்தில் தெரிவிக்க வேண்டும்.
'விண்ணப்பத்தில், அதிகாரிகளிடம் சான்றொப்பம் பெற வேண்டும்' என, கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. இந்நிலையில், ஓய்வூதியம் பெறுவோர், அதிகாரிகளிடம் சான்றொப்பம் பெற சிரமப்படுவதால், விண்ணப்பத்தை எளிமைப்படுத்தும்படி,கருவூலம் மற்றும் கணக்கு துறை இயக்குனர், அரசுக்கு கடிதம் எழுதினார். அதை ஏற்ற அரசு, 'ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள், அதிகாரிகளிடம் சான்றொப்பம் பெறாமல், சுய சான்றொப்பம் அளித்தால் போதும்' என அறிவித்துள்ளது.
இவ்விவரத்தை, அனைத்து ஓய்வூதியம் வழங்கும் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தும்படி, கருவூலம் மற்றும் கணக்கு துறை இயக்குனருக்கு, நிதி துறைசெயலர் சண்முகம் உத்தரவிட்டு உள்ளார்.
'விண்ணப்பத்தில், அதிகாரிகளிடம் சான்றொப்பம் பெற வேண்டும்' என, கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. இந்நிலையில், ஓய்வூதியம் பெறுவோர், அதிகாரிகளிடம் சான்றொப்பம் பெற சிரமப்படுவதால், விண்ணப்பத்தை எளிமைப்படுத்தும்படி,கருவூலம் மற்றும் கணக்கு துறை இயக்குனர், அரசுக்கு கடிதம் எழுதினார். அதை ஏற்ற அரசு, 'ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள், அதிகாரிகளிடம் சான்றொப்பம் பெறாமல், சுய சான்றொப்பம் அளித்தால் போதும்' என அறிவித்துள்ளது.
இவ்விவரத்தை, அனைத்து ஓய்வூதியம் வழங்கும் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தும்படி, கருவூலம் மற்றும் கணக்கு துறை இயக்குனருக்கு, நிதி துறைசெயலர் சண்முகம் உத்தரவிட்டு உள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி