டெல்லியில் தமிழக ஆசிரியர்கள் தர்ணா போராட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 15, 2015

டெல்லியில் தமிழக ஆசிரியர்கள் தர்ணா போராட்டம்


தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் நேற்று டெல்லி ஜந்தர்மந்தரில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. சுமார் 600 ஆசிரியர்கள் பங்கேற்ற போராட்டத்துக்கு அகில இந்திய ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பின் செயலாளர் அண்ணாமலை தலைமை தாங்கினார். மாநில தலைவர் வின்சென்ட் பால்ராஜ், பொதுச்செயலாளர் கோ.முருகேசன், பொருளாளர்நம்பீசன் ஆகியோர் கலந்து கொண்டனர். கம்யூனிஸ்டு எம்.பி.க்கள் டி.ராஜா, சி.பி.நாராயணன்(கேரளா) ஆகியோர் ஆதரித்து பேசினார்கள்.
மத்திய அரசின் கல்வி நிதியை 6 சதவீதமாக உயர்த்த வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், 7–வது ஊதியக்குழு அறிக்கையை வெளியிட்டு 2014 ஏப்ரல் முதல் அமல்படுத்த வேண்டும், தொடக்க கல்வியில் தாய்மொழி மட்டுமே பயிற்றுமொழியாக உறுதி செய்ய வேண்டும், வருமான வரிவிலக்கு உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி