இந்த பணியிடங் களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த தேர்வுக்காக 31 ஆயிரத்து 616 பேர் விண்ணப்பித்திருந்தனர். மாவட்டம் முழுவதும் 47 மையங்களில் தேர்வு நடைபெற்றது.எனினும், இந்த தேர்வில் 25 ஆயிரத்து 329 பேர் மட்டுமே பங்கேற்றனர். தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தவர்களில் 6,287 பேர் தேர்வெழுதவில்லை.
திருவள்ளூர்
பொன்னேரி கல்வி மாவட்டத்தில் 25 மையங்கள், திருவள்ளூர் கல்வி மாவட்டத்தில் 32 மையங்கள் என, திருவள்ளூர் வருவாய் மாவட்டத் தில் 57 மையங்களில் தேர்வு நடந்தது.இதில், தேர்வுக்கு விண்ணப்பித்த 29,429 பேரில், 24,056 மட்டுமே தேர்வு எழுதினர். 5,373 பேர் தேர்வு எழுதவில்லை.கல்வித் துறையைச் சேர்ந்த 1,848 ஊழியர்கள் தேர்வு நடத்தும் பணியில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் நடந்த தேர்வை, மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சந்திரசேகர், மாவட்ட கல்வி அலுவலர் மலர்விழி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
தேர்வுமையம் தொலைவில்(150கிமீ)இருந்ததுநாகை மாவட்டத்தில் கொள்ளிடம் சீர்காழி மயிலாடுதுறை பகுதியில் இருப்பவர்களுக்கு வேதாரண்யம் பகுதிகளிலும் வேதாரண்யம்பகுதியில்இருப்பவர்களுக்குசீர்காழி மயிலாடுதுறையிலும் தேர்வு மையம் இருந்ததால் தேர்வர்கள் கலக்கம் அடைந்தனர்ஏன் இந்த குளறுபடி ?
ReplyDelete