பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் துணை வங்கிகளை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, வரும், 24ம் தேதி, ஒருநாள், நாடு முழுவதும், வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்செய்கின்றனர்.அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க, சேலம் மாவட்ட தலைவர் சுவாமிநாதன் கூறியதாவது:
பாரத ஸ்டேட் வங்கியின் துணை வங்கிகள், 3,000க்கும் மேற்பட்டவை உள்ளன.
இவை, 'சமஸ்தானம்' காலத்தில், அந்தந்த எல்லைக்கு உட்பட்ட மக்களின் தேவையை நிறைவேற்றவும், சேவையாற்றவும் உருவாக்கப்பட்டன; பின், அரசுடைமை ஆக்கப்பட்டன.மக்களின் தேவையறிந்து உருவாக்கப்பட்ட, ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆப் டிகானிர் ஜெய்ப்பூர் உள்ளிட்ட, பல துணை வங்கிகளை, பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்க முயற்சி நடக்கிறது; அதை செய்யக் கூடாது.
அப்படி செய்வதால், வங்கியின் முக்கியத்துவமும், வங்கி துவங்கப்பட்ட நோக்கமும் இல்லாமல் போய்விடும். வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, நல்ல நிலையில் லாபத்தில் இயங்கும் துணை வங்கிகளை இணைக்க வேண்டிய அவசியமோ, கட்டாயமோ கிடையாது.துணை வங்கிகளை இணைக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து, வரும், 24ம் தேதி ஒருநாள், தேசிய அளவில், வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
பாரத ஸ்டேட் வங்கியின் துணை வங்கிகள், 3,000க்கும் மேற்பட்டவை உள்ளன.
இவை, 'சமஸ்தானம்' காலத்தில், அந்தந்த எல்லைக்கு உட்பட்ட மக்களின் தேவையை நிறைவேற்றவும், சேவையாற்றவும் உருவாக்கப்பட்டன; பின், அரசுடைமை ஆக்கப்பட்டன.மக்களின் தேவையறிந்து உருவாக்கப்பட்ட, ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆப் டிகானிர் ஜெய்ப்பூர் உள்ளிட்ட, பல துணை வங்கிகளை, பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்க முயற்சி நடக்கிறது; அதை செய்யக் கூடாது.
அப்படி செய்வதால், வங்கியின் முக்கியத்துவமும், வங்கி துவங்கப்பட்ட நோக்கமும் இல்லாமல் போய்விடும். வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, நல்ல நிலையில் லாபத்தில் இயங்கும் துணை வங்கிகளை இணைக்க வேண்டிய அவசியமோ, கட்டாயமோ கிடையாது.துணை வங்கிகளை இணைக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து, வரும், 24ம் தேதி ஒருநாள், தேசிய அளவில், வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி