அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு செல்லாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 15, 2015

அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு செல்லாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

வினாத்தாள் மற்றும் விடைகள் முன்கூட்டியே வெளியான விவகாரம் மற்றும் பல்வேறு புகார்கள் காரணமாக சர்ச்சையில் சிக்கியதையடுத்து நாடு முழுவதும் நடைபெற்ற அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு செல்லாது என்று உச்சநீதிமன்றம் இன்று அதிரடியாகதீர்ப்பளித்துள்ளது
.கடந்த மே மாதம் 5ம் தேதி மருத்துவ நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வினை 6.3 லட்சம் பேர் எழுதினர். இந்நிலையில் ஹரியானா மாநிலத்தில் வினாத்தாள் மற்றும் விடைகள் முன்கூட்டியே வெளியானதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக ஹரியானாவைச் சேர்ந்த மாணவர்கள், பெற்றோர் தரப்பு சார்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இதனை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிப்பளித்துள்ளது.

அதில் கடந்த மே மாதம் நடைபெற்ற அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு செல்லாது என்றும்,அடுத்த நான்கு வாரத்திற்குள் மறுதேர்வு நடத்த வேண்டும் என்று சிபிஎஸ்இக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வினாத்தாள் முன்கூட்டியே வெளியான விவகாரத்தில் ஒரு மாணவர் முறைகேடாக பயனடைந்தாலும் தவறுதான் என நீதிபதிகள் தீர்ப்பின் போது கருத்து தெரிவித்தனர்.​

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி