தனியார் பள்ளி கல்விக் கட்டண புகார்:விசாரிக்க சி.இ.ஓ.,க்களுக்கு அதிகாரம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 15, 2015

தனியார் பள்ளி கல்விக் கட்டண புகார்:விசாரிக்க சி.இ.ஓ.,க்களுக்கு அதிகாரம்

தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணப் புகார்கள் குறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளான - சி.இ.ஓ.,க்கள் விசாரிக்க, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லுாரிகளில், புதிய கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. பல்வேறு தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணய கட்டணத்தை விட, கூடுதல் கட்டணத்தை வசூலிப்பதாக, புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

குறிப்பாக, மெட்ரிக் பள்ளிகள் தவிர, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் இந்தக் கட்டண விதிமீறல் அதிக அளவில் உள்ளதாகவும், பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.சென்னை, அடையாறில் உள்ள பாலவித்யா மந்திர் பள்ளியில், இரண்டு வித கட்டணம் வசூலிப்பதாகவும், மாணவர்களை பாகுபாடாக நடத்துவதாகவும், ஆசிரியர்கள், பெற்றோர்மற்றும் மாணவர்கள் கடந்த வாரம் தொடர் போராட்டம் நடத்தினர்.பெற்றோர் அளித்த புகாரால், தனியார் பள்ளி கல்விக் கட்டண நிர்ணயக் கமிட்டி தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி சிங்காரவேலு உத்தரவுப்படி, கல்வித்துறை இணை இயக்குனர் கார்மேகம், சிறப்பு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவர், சம்பந்தப்பட்ட பள்ளியில் நேரடியாக எட்டு மணி நேர விசாரணை நடத்தினார்.

சிங்காரவேலு கமிட்டியும் வரும், 18ம் தேதி விசாரணை நடத்துகிறது.இதற்கிடையில், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளிக்கு எதிராக, பெற்றோர் மற்றும் மாணவர்கள் கடந்த வாரம் தொடர் போராட்டம் நடத்தினர். பெற்றோர் சார்பில், நீதிபதி சிங்காரவேலு கமிட்டியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.இதேபோல், பல்வேறு பள்ளிகளிலும் கட்டணப் புகார்கள் எழுவதால், பொதுவான உத்தரவு ஒன்றை நீதிபதி சிங்காரவேலு கமிட்டி பிறப்பித்துள்ளது. இதன் அடிப்படையில், அனைத்து மாவட்டங்களிலும் தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணம் தொடர்பான புகார்களை, சி.இ.ஓ.,க்கள் விசாரிக்கலாம்என, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் பள்ளி மீதான புகார் குறித்து விசாரிக்க, சென்னை, சி.இ.ஓ., அனிதா விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி