கருவூலத்துறை அதிரடி அறிவிப்பு ஆதார் எண் இருந்தால்தான் சம்பளம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 22, 2015

கருவூலத்துறை அதிரடி அறிவிப்பு ஆதார் எண் இருந்தால்தான் சம்பளம்

ஆதார் எண் இருந்தால்தான் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என கருவூலத்துறை அறிவிப்பால் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுஊழியர்கள், தங்களது ஆதார் எண் விபரங்களை சமர்ப்பித்தால் மட்டுமே ஜூலை மாதசம்பளப் பட்டியல் ஏற்கப்படும் என கருவூலத்துறை அறிவித்துள்ளது.
இதனால், அரசு ஊழியர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்யவும் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து விருதுநகர் மாவட்ட அரசு ஊழியர் சங்க தலைவர் முத்துராஜ் கூறுகையில், ‘‘அரசு திட்டங்களுக்கு ஆதார் எண்ணை கட்டாயப்படுத்தக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதற்கு எதிராக விருதுநகர் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் தங்களுடைய ஆதார் எண் விபரங்களை சமர்ப்பித்தால்தான் ஜூலை மாத சம்பள பட்டியல் ஏற்கப்படும் என கருவூலத்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சங்க நிர்வாகிகள் கருவூலத்துறை அதிகாரியை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டால், பதில் அளிக்க மறுக்கிறார். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்படும் மாவட்ட கருவூலஅதிகாரியை கண்டித்து நாளை மறுநாள் (ஜூன் 24) மாவட்ட கருவூலம் முன், ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்,’’ என்றார்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி