பழைய வாக்காளர்களுக்கும் வண்ணமயமான 'ஸ்மார்ட் கார்டு' வழங்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.ஜன.,5 முதல் வாக்காளர்களுக்கு'ஸ்மார்ட் கார்டு' வடிவிலான அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இவற்றில் உள்ள 'பார் கோடில்' வாக்காளரின் அனைத்து விபரங்களும் இடம் பெற்றுள்ளன. இந்த அட்டை குஜராத் அகமதாபாத்தில் தயாரிக்கப்படுகிறது.
இதனால் 2014 அக்.,15 பின் சேர்ந்த புதிய வாக்காளர்களுக்கு மட்டுமே 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்படுகின்றன. அதற்கு முன் சேர்ந்த பழைய வாக்காளர்களிடம் கருப்பு, வெள்ளை நிற காகிதத்தில் 'லேமினேசன்' செய்யப்பட்ட சாதாரண அடையாள அட்டைகளே உள்ளன. தற்போது அவற்றையும் 'ஸ்மார்ட் கார்டில்' வடிவில் வழங்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக அனைத்து மாவட்டங்களுக்கு்'ஸ்மார்ட் கார்டு' தயாரிக்கும் இயந்திரங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
தேர்தல் அதிகாரி ஒருவர் கூறுகையில், “வாக்காளர் பட்டியல், ஆதார் எண் ஒப்பிடும் பணி முடிந்தவுடன் 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்படும். பழைய வாக்காளர்கள் விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம்,” என்றார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி