'044 - 2595 2450' என்ன தெரியுமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 7, 2015

'044 - 2595 2450' என்ன தெரியுமா?

ஆதரவின்றிச் சுற்றித்திரியும் குழந்தைகள் பற்றி தகவல் தெரிவிக்க, தொலைபேசி எண்அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில், காணாமல் போன மற்றும் ஆதரவின்றிச் சுற்றித்திரியும் குழந்தைகளைக் கண்டுபிடிக்க, 'புன்னகையைத் தேடி' என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது.இதன்படி, தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும், குழந்தைகள் நலனோடு தொடர்புடையதுறைகள் மற்றும் காவல் துறை அலுவலர்கள் அடங்கிய, ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டன.


இந்தக் குழுவினர், ஜனவரியில், 3,000 குழந்தைகளைக் கண்டுபிடித்தனர். இந்நிலையில், இந்த மாதத்திலும், ஒவ்வொரு மாவட்டத்திலும், அரசு மற்றும் அரசு சாரா அலுவலர்கள் அடங்கிய குழுக்கள், கோவில்கள், பேருந்து நிலையங்கள், சுற்றுலாத் தலங்கள், ரயில் நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில், ஆதரவின்றி திரியும் குழந்தைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு உள்ளன.தங்கள் பகுதியில் காணாமல் போன மற்றும் ஆதரவின்றிச் சுற்றித்திரியும் குழந்தைகள் பற்றி பொதுமக்கள் தகவல் தெரிவிக்க விரும்பினால், 044 - 2595 2450 என்ற தொலைபேசி எண்ணையோ அல்லது, '1098' என்ற, 'சைல்டுலைன்' இலவச எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி