பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று முதல் மதிப்பெண் சான்றிதழ். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 15, 2015

பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று முதல் மதிப்பெண் சான்றிதழ்.

பிளஸ் 2 மாணவர்களுக்கு புதன்கிழமை (ஜூலை 15) முதல் அசல் மதிப்பெண்சான்றிதழ் வழங்கப்படும். அந்தந்தப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களிடம் மாணவர்கள் இந்தச் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.


தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களில் மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 7-ஆம் தேதி வெளியிடப்பட்டன. உயர் படிப்புகளில் சேரும் மாணவர்களின் நலன் கருதி முதல் முறையாக பிளஸ் 2 மாணவர்களுக்கு இந்த ஆண்டு தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த மதிப்பெண் சான்றிதழ் 90 நாள்களுக்குச் செல்லும் என அறிவிக்கப்பட்டது.

விடைத்தாள் மறுகூட்டல்,மறுமதிப்பீடு ஆகியவை முடிவடைந்த நிலையில், இப்போது அனைத்து மாணவர்களுக்கும்அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. வேலைவாய்ப்புக்கும் பதிவு செய்யலாம்: பிளஸ் 2 மாணவர்கள் தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழைப் பெற்றதும் பள்ளியிலேயே ஆன்-லைன் வழியாக வேலைவாய்ப்புக்கும் பதிவு செய்யலாம். இந்தத் திட்டத்தை பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி. வீரமணி சென்னைசாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை தொடக்கி வைக்கிறார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி