50,000 இடங்களுக்கு மாணவர் இல்லை தாமத நடவடிக்கையால் திட்டம் தோல்வி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 7, 2015

50,000 இடங்களுக்கு மாணவர் இல்லை தாமத நடவடிக்கையால் திட்டம் தோல்வி

இலவச மாணவர் சேர்க்கைத் தாமதமானதால், தனியார் பள்ளிகளில், 50 ஆயிரம் எல்.கே.ஜி., இடங்களில் சேர, மாணவர் இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. இவற்றில், அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களைச் சேர்க்கலாமா என, கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.தமிழக மெட்ரிக் பள்ளிகளில், இலவச மாணவர் சேர்க்கை சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தவில்லை என, புகார் எழுந்தது.
இந்த வழக்கை விசாரித்த, சென்னை உயர்நீதி மன்றம், பள்ளிகளில் காலி இட விவரத்தை, இணையதளத்தில் அறிவிக்க, மெட்ரிக் இயக்குனரகத்துக்கு உத்தரவிட்டது.

கடந்த மாதம், முதல் கட்ட காலியிடப்பட்டியல் வெளியானது. இரண்டாம் கட்ட பட்டியல்,http://tnmatricschools.com/ இணையதளத்தில், இரு தினங்களுக்கு முன் வெளியானது.'இந்த இடங்களில், தமிழக அரசின் இலவச மாணவர் சேர்க்கைச் சட்டத்தின் கீழ், மாணவர்களைச் சேர்க்க, அந்தந்த பள்ளிகளை அணுகலாம்' என, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரும், இலவச மாணவர் சேர்க்கை மாநில முதன்மை தொடர்பு அலுவலருமான பிச்சை தெரிவித்து உள்ளார்.ஆனால், இந்த காலியிடங்களில் சேர மாணவர்கள் இல்லை என்ற சூழல் உள்ளது.மெட்ரிக் இயக்குனரகம் உரிய முறையில் அறிவிப்பு செய்து, முன்கூட்டியே இத்திட்டத்தைத் துவங்காததே காரணம் என, கூறப்படுகிறது.

பள்ளி (எண்ணிக்கை),ஒதுக்கப்பட்ட இடங்கள்,நிரம்பியஇடங்கள்,காலிஇடங்கள்

நர்சரி (5,314)55,60526,46629,139

மெட்ரிக் (3,673)61,87539,32922,546

மொத்தம்51,685

அனைத்துத் தனியார் பள்ளிகளிலும், டிசம்பர் முதல் மார்ச்சுக்குள் மாணவர் சேர்க்கையைத் துவங்கி விட்டனர். இலவச மாணவர் சேர்க்கைத் திட்டம், ஜூனில் தான்துவங்கியது.

அதனால், மாணவர்களில் பெரும்பாலானோர் நன்கொடை கொடுத்தும், அதிகக் கட்டணம் கட்டியும் சேர்ந்து விட்டனர். எனவே, இலவசமாகச் சேர மாணவர்கள் இல்லை.பெற்றோர்தற்போது வீடு, வீடாக இலவச மாணவர் சேர்க்கைக்கான பிரசாரம் செய்ய ஆசிரியர்களுக்கு உத்தர விடப்பட்டு உள்ளது. அரசு தொடக்கப் பள்ளி மாணவ, மாணவியரில் சிலரை, தனியார் பள்ளி காலியிடங்களில் சேர்க்கலாமா என்றும் ஆலோசித்து வருகிறோம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி