தேசிய வருவாய் வழிதிறன் தேர்வில்தேவக்கோட்டை பள்ளி மாணவர்கள் சாதனை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 17, 2015

தேசிய வருவாய் வழிதிறன் தேர்வில்தேவக்கோட்டை பள்ளி மாணவர்கள் சாதனை

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு தமிழ்நாடு முழுவதும் உள்ள மேல்நிலை,உயர்நிலை ,நடுநிலைப் பள்ளிகளில் கடந்த பிப்ரவரிமாதம் நடந்தது.
தேர்வில் வெற்றிபெறும் மாணவ மாணவியர்க்கு அவர்களின் பெயரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்பு கணக்கு துவங்கி அதன் வாயிலாக ஒவ்வொரு மாதமும் ஐநூறு ரூபாய் வீதம் நான்கு ஆண்டுகளுக்கு 24 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகையாக மத்திய அரசின் நிதியிலிருந்து மாநில அரசு செலுத்துகிறது.தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்தேர்வில் பங்கேற்றனர்.

தேர்வின் முடிவுகள் இணையதளத்தில்வெளியிடப்பட்டுள்ளது.6695 மாணவர்கள் மட்டுமே தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.தேவக்கோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலை பள்ளியின் மாணவர்கள் நடராஜன் ,நவீன்குமார்,கிருஷ்ணவேணி ,சொர்ணாம்பிகாஆகிய நான்கு பேர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் பள்ளி நிர்வாகத்தின் சார்பாக காலை வழிபாட்டு கூட்டத்தில் பரிசுகள்வழங்கி பாராட்டினார்.மாணவர்கள் அவர் தம் பெற்றோரும் பள்ளிக்கு வருகை தந்து காலை வழிபாட்டு கூட்டத்தில் பாராட்டு விழாவில் பங்கேற்றனர்.

இது குறித்து வெற்றி பெற்ற மாணவர்கள் கூறுகையில்,நாங்கள் வெற்றி பெற்றது மிகவும் பெருமையாக இருக்கிறது.எங்களின் வெற்றிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர்,ஆசிரியர்கள்,ஈரோடு ரயில்வே பள்ளி ஆசிரியர் துரை பாண்டியன்,பெறோர்கள் விடா முயற்சியே காரணம்,அவர்களுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம்,என மாணவர்கள் தெரிவித்தனர்.10ம் வகுப்பு,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முடிவுகள் வெளியாவது போன்று 8 ம்வகுப்பு மாணவர்களுக்கு இந்ததேர்வு முடிவுகள் முக்கியமானது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி