வங்கிக் கணக்கில் ரேஷன் பொருட்கள் மானியம்: செப்டம்பரில் தொடங்க மத்திய அரசு முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 3, 2015

வங்கிக் கணக்கில் ரேஷன் பொருட்கள் மானியம்: செப்டம்பரில் தொடங்க மத்திய அரசு முடிவு

சமையல் எரிவாயு மானியத்தைத் தொடர்ந்து மண்ணெண்ணெய் உள்ளிட்ட ரேஷன் பொருட்களின் மானியத்தை பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தும் திட்டத்தை செப்டம்பரில் மத்திய அரசு தொடங்கவுள்ளது.

முதல் கட்டமாக
புதுச்சேரி, சண்டிகர் மற்றும் தாத்ரா நாகர்ஹவேலி ஆகிய மூன்று யூனியன் பிரதேசங்களில் செப்டம்பர் ஒன்றாம் தேதி இந்த திட்டம் தொடங்கும் என டெல்லியில் நிதி அமைச்சக இணைச் செயலர் பியூஷ் குமார் தெரிவித்துள்ளார்.இந்த திட்டத்தின்கீழ் ரேஷன் பொருட்களை மாநில அரசுகள் கொள்முதல் செய்யும் விலையைக் கொடுத்து நுகர்வோர் வாங்க வேண்டியிருக்கும் என்ற அவர், அவர்களது மானியத் தொகையாக சுமார் 500 முதல் 700 ரூபாயை வங்கிக் கணக்கில் அரசு வரவு வைக்கும் என்றும் கூறினார்.இந்த ஆண்டு இறுதிக்குள் ரேஷன் கார்டுகளை மின்னணுமயமாக்க மாநில அரசுகளைக் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் பியூஷ் குமார் தெரிவித்தார்.​

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி