கலாம் படித்த பள்ளியில் மக்கள் திரண்டு அஞ்சலி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 29, 2015

கலாம் படித்த பள்ளியில் மக்கள் திரண்டு அஞ்சலி

ராமேஸ்வரத்தில், அப்துல் கலாம் படித்த பள்ளிக்கு, திரண்டுவந்த பொதுமக்கள், கலாம் படத்திற்கு மலர்களை துாவி, அஞ்சலி செலுத்தினர்.ராமேஸ்வரத்தில் உள்ள கலாம் வீடு முன், பள்ளி மாணவர்கள், அரசியல் கட்சியினர், ஆட்டோ ஓட்டுனர்கள், மீனவர்கள் என, அனைத்து தரப்பினரும் குவிந்த வண்ணம் உள்ளனர்.


இவர்கள், கலாமின் அண்ணன் முத்துமீரா லெப்பை மரைக்காயர், இவரது பேரன்சலீம் ஆகியோரை சந்தித்து ஆறுதல் கூறினர்.கலாம் படித்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், கலாம் படம் வைக்கப்பட்டு இருந்தது. ஏராளமான பொதுமக்கள், நேற்று திரண்டு வந்து, படத்திற்கு மலர்துாவி அஞ்சலி செலுத்தினர்.ராமேஸ்வரம், மண்டபம் பள்ளி மாணவர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக வந்து, அவரது வீட்டின் முன் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். ராமேஸ்வரத்தில், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி