தேசிய ஆன்-லைன் கல்வி உதவித் தொகை இணையத்தில் பல்கலைக்கழகங்கள் உடனடியாகத் தங்களைப் பதிவு செய்ய பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.அதோடு, மத்திய அரசின் பல்வேறு கல்வி உதவித் தொகைத் திட்டங்கள் குறித்து மாணவர்களிடையே பரவலாக விளம்பரப்படுத்துமாறும் பல்கலைக்கழகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் யுஜிசி அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:உயர் கல்வி பெறும் மாணவர்களுக்கு மத்திய அரசின் பல்வேறு கல்வி உதவித் தொகைகள் விரைவாகவும், நேரடியாகவும் சென்றடையும் வகையில், தேசிய இ-கல்வி உதவித் தொகை இணையத்தை (http:scholarships.gov.inlogin.go) மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை உருவாக்கியிருக்கிறது.
இந்த இணையம் மூலம் சமர்ப்பிக்கப்படும் மாணவரின் விண்ணப்பம், முதலில் அவர்கள் படிக்கும் பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகள் மூலம் பரிசீலிக்கப்பட்டுபின்னர் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.எனவே, இந்த இ-கல்வி உதவித் தொகை இணையத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களும் உடனடியாகத் தங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.மாணவர்களின் விண்ணப்பங்கள் விரைவாக பரிசீலிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.மேலும், மத்திய அரசின் பல்வேறு கல்வி உதவித் திட்டங்கள் குறித்து மாணவர்களிடையே பரவலாக விளம்பரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் பல்கலைக்கழகங்கள் எடுக்க வேண்டும்எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் யுஜிசி அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:உயர் கல்வி பெறும் மாணவர்களுக்கு மத்திய அரசின் பல்வேறு கல்வி உதவித் தொகைகள் விரைவாகவும், நேரடியாகவும் சென்றடையும் வகையில், தேசிய இ-கல்வி உதவித் தொகை இணையத்தை (http:scholarships.gov.inlogin.go) மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை உருவாக்கியிருக்கிறது.
இந்த இணையம் மூலம் சமர்ப்பிக்கப்படும் மாணவரின் விண்ணப்பம், முதலில் அவர்கள் படிக்கும் பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகள் மூலம் பரிசீலிக்கப்பட்டுபின்னர் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.எனவே, இந்த இ-கல்வி உதவித் தொகை இணையத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களும் உடனடியாகத் தங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.மாணவர்களின் விண்ணப்பங்கள் விரைவாக பரிசீலிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.மேலும், மத்திய அரசின் பல்வேறு கல்வி உதவித் திட்டங்கள் குறித்து மாணவர்களிடையே பரவலாக விளம்பரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் பல்கலைக்கழகங்கள் எடுக்க வேண்டும்எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி