நடமாடும் அறிவியல் ஆய்வக மனிதர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 11, 2015

நடமாடும் அறிவியல் ஆய்வக மனிதர்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியில் சென்னை பரிக்ஷன் அறக்கட்டளை சார்பில் எளிய பரிசோதனை முறையில் வாழ்வியல் அறிவியலை பள்ளிகளில் கற்பிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவி சுமித்ரா தலைமை வகித்தார். சேவுகன்அண்ணாமலைக் கல்லூரி முதல்வர் சந்திரமோகன் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர்சொக்கலிங்கம் வரவேற்றார். அறக்கட்டளை திட்ட இயக்குநர் ,அறிவியலார் அறிவரசன்மாணவர்களுக்கு எளிய முறையில் பரிசோதனை மூலம் விளக்கமளித்தார்.சுமார் 800க்கும்அதிகமான வேதியல் பொருள்களையும் ,கூம்பு குடுவைகளையும் ,சோதனைகளுக்கு தேவையானமற்ற பொருள்களையும் தனது பையில் வைத்து கொண்டு அதனை தமிழ்நாடு முழுவதும் ஊர், ஊராக எடுத்து சென்று 1 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும்அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு எளிமையாக புரியும் வகையில் இலவசமாகசெய்து காண்பிக்கின்றார்.

அறிவியலார் அறிவரசன் பேசுகையில், அதிக கூச்சல்போட்டால் , மனநிலை பாதிக்கபடும், எனவே வகுப்பில் கூச்சல் போடக்கூடாது.காற்றுக்கு எடை உண்டு. பக்கத்தில் இருப்பவர்களோடு அமைதியாக பேச வேண்டும். அதிகசத்தம் போட்டு பேசக்கூடாது. கூச்சல் போடக்கூடாது.

இதற்கு டெசிபிள் முறையில்அளவீடு கணக்கிடப்படுகிறது. 80 டெசிபிளுக்கு மேல் போனால்,ஒரு வருடத்தில் மனநிலைபாதிக்கும். செவிப்பறையும் பாதிக்கும். வகுப்புகள் உட்பட மொத்தத்தில் கூச்சல்போடுவதை தவிருங்கள். கேரளாவில் மின்சாரம் இன்றி சைக்கிள் பெடல் செய்வது காலால்மிதித்து செயல்படும் வாஷிங் மெசினை ஒரு மாணவி கண்டுபிடித்துள்ளார். அதே போல்,காது கேளாதோருக்கு பற்கள் மூலம் ஓசைகளை,பாடல்களை கேட்டு ரசிக்கும் புதியகருவியை மாணவர்களிடம் அறிமுகபடுத்தினார்.ஒத்ததிர்வு ,புல்லாங்குழல் இசை,தனிமம்,சேர்மம் ஆகியவற்றின் பண்புகள்,நிறம்காட்டிகள் ,அமிலம்,காரம் இவற்றின் பண்புகள்என பல தகவல்களை மாணவர்களோடு மாணவராக ஒன்றி செய்த செயல்பாடுகள் மாணவர்களிடையே ஆர்வத்தையும்,சந்தோசத்தையும் ஏற்படுத்தியது. கல்வி கற்பதோடு, அன்றாடவாழ்க்கையில் நிறைய செயல்களை சிறு சிறு செயல்முறைகளோடு செய்து பார்த்தால்மனதில் பதிவதோடு உயர்கல்விக்கு கற்பதற்கு எளிமையாக உதவியாக இருப்பதோடு புதியகண்டுபிடிப்புக்களுக்கு வழிவகுக்கும்,என்றார்.ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி