14, 15ல் விடுப்பு எடுக்க ஆசிரியர்களுக்கு தடை-DINAMALAR - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 12, 2015

14, 15ல் விடுப்பு எடுக்க ஆசிரியர்களுக்கு தடை-DINAMALAR

சுதந்திர தினத்தை முன்னிட்டு, வரும், 14, 15ம் தேதிகளில், ஆசிரியர்கள் விடுப்பு எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.நாட்டின், 69வது சுதந்திர தினம்,வரும், 15ம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. வழக்கமாக,


ஞாயிற்றுக்கிழமைக்கு முதல் நாள், அரசு விடுமுறை தினமாக வரும் போது, ஆசிரியர்கள், மூன்று நாட்கள் சேர்த்து விடுமுறை எடுத்து விடுவர்.அதை தவிர்க்க, இந்த ஆண்டு, அனைத்து கல்வி நிறுவனங்களிலும், சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாட உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, பள்ளிக்கல்வித் துறையிலிருந்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.அதில், அரசு பள்ளிகளில், வரும், 14, 15ம் தேதிகளில், ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினமான, 15ம் தேதி, கட்டாயம் சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி