பள்ளிக்கல்வித் துறையில், 700 ஆசிரியர்களுக்கு, நேற்று, ஒரே நாளில் கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.நடப்பு கல்வியாண்டுக்கானஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு, கடந்த, 8ம் தேதி துவங்கியது.
முதல் நாளில், தொடக்கப்பள்ளித் துறையில், உதவித் தொடக்கக் கல்வி அதிகாரி இடமாறுதல், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது.நேற்று, பள்ளிக்கல்வி இயக்குனரக கட்டுப்பாட்டிலுள்ள மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு நடந்தது.இதில், 592 தலைமை ஆசிரியர் மாவட்டத்திற்கு உள்ளும், 100 பேர் வேறு மாவட்டங்களுக்கும் இடமாறுதல் பெற்றனர். இவற்றில், 365 பேர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர். மற்றவர்கள், சிறப்பாசிரியர் என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.நீலகிரி மாவட்டத்தில், இரண்டு தலைமை ஆசிரியர் காலி இடங்கள் மறைத்து வைக்கப்பட்டதாக, திடீர் புகார் எழுந்தது. இதனால் ஏற்பட்ட பிரச்னையால், இரண்டு மணி நேர கலந்தாய்வு நிறுத்தப்பட்டு, பேச்சு நடத்தி பின் மீண்டும் கலந்தாய்வு நடந்தது.
Aug 13, 2015
Home
kalviseithi
700 ஆசிரியர்களுக்கு இடமாறுதல் நீலகிரி மாவட்டத்தில் குழப்பம்
700 ஆசிரியர்களுக்கு இடமாறுதல் நீலகிரி மாவட்டத்தில் குழப்பம்
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி