அரசு ஊழியர்கள் கட்டாயம் தன் பிள்ளைகளை அரசு பள்ளியிலதான் படிக்கவைக்கவேண்டும் அலகாபாத் உயர்நீதி மன்றம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 19, 2015

அரசு ஊழியர்கள் கட்டாயம் தன் பிள்ளைகளை அரசு பள்ளியிலதான் படிக்கவைக்கவேண்டும் அலகாபாத் உயர்நீதி மன்றம்

உ.பி., மாநிலத்தில் அரசு பணியிலுள்ளவர்கள் அனைவரும், தங்களது பிள்ளைகளை அரசுப்பள்ளியில் சேர்க்க வேண்டும் என, அலகாபாத் ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இதுதொடர்பாக உமேஷ் குமார் சிங் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி சுதிர் அகர்வால்,


உ.பி., மாநிலத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் அனைவரும், தங்களது பிள்ளைகளை அரசுப்பள்ளியில் தான் சேர்க்க வேண்டும்.


அவ்வாறு சேர்ப்பதன் மூலம் அரசுப் பள்ளிகள் நன்றாக இயங்கும் வாய்ப்புகள் உருவாகும்.அதை மீறி தனியார் பள்ளிகளில் சேர்க்க விரும்பினால், அப்பள்ளியில்அவர்கள் அளிக்கும் பீஸ் எவ்வளவோ, அவ்வளவு பணத்தை அரசு கருவூலத்துக்கு செலுத்த வேண்டும். மேலும் அரசின் மூலம் அவர்களுக்கு வழங்குப்படும் அனைத்துசலுகைகளையும் ரத்து செய்ய வேண்டும் என தீர்ப்பு வழங்கினார்.இதுதொடர்பாக அடுத்த 6 மாதத்தற்குள் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசு தலைமை செயலரிடம், அலகாபாத் ஐகோர்ட் கேட்டுக்கொண்டுள்ளது.

20 comments:

  1. Am really proud of this judgement and honorable judge sir...when ll take notice this thing in our chennai high court and order it to implemet in our state?

    ReplyDelete
  2. Tamilagathil endru varum idhu pondra nilai

    ReplyDelete
  3. அமைச்சரே......க க க போ.........

    ReplyDelete
  4. good judgement tamilnatil ethupol judgment vara enna seinum

    ReplyDelete
  5. பல நல்ல ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் இருக்கின்றனர் அவர்கள் மன்னிக்கவும் சில வீனா போன விளங்கம போன சிலர் சம்பள உயர்வுக்கு மட்டும் கொடி பிடிக்கிறார்கள் ஆனால் அவர்கள் பிள்ளை வருடத்திற்கு 1 லட்ச ரூபாய்க்கு மேல் கட்டணம் செலுத்தி தனியார் பள்ளிகளில் படிக்கின்றர் 1 லட்சம் எப்படி வருது எல்லாம் லஞ்சம் அது வாங்க வழி இல்லாட்டா எதாவது ஒரு சங்கம் வச்சு வசூல் செய்றது. எவன் எப்படி போனா என்ன நம்ம பிள்ளைங்க நல்லா இங்கிலிஷ் ல பேசனும் கடைசி காலத்தில அவங்க பிள்ளைங்க கண்டிப்பா கஞ்சி ஊத்தாது பலரோட பாவம் சும்மா விடாது. இவங்களாம் எதற்கு அரசு வேலைக்கு வந்தாங்க இதுல இப்ப இருக்குற பொண்ணுங்க அரசு பள்ளி அரசு மருத்துவமணை , இப்படி எதையும் பயன்படுத்த மாட்டாங்களாம் ஆனா அரசாங்கத்துல வேலை பாக்குற மாப்பிளை தான் வேணுமாம் என்ன கொடுமை சார் இது........

    நல்ல தீர்ப்பு இந்த தீர்ப்பை அளித்த நீதி அரசர் சிறப்பான தீர்ப்பை அளித்துள்ளார் .

    ReplyDelete
  6. தமிழ்நாட்டிலும் இதுபோல நடந்தால் மகிழ்ச்சி...!

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. நீதிபதியின் பிள்ளைகள் எங்கு படிக்கிறார்கள் அரசு ஊழியர்களுக்கு பென்ஷன் கிடையாதாம் ஆனால் அரசியல்வாதிகளான எம்பி எம் எல் ஏ களுக்கு மட்டும் பல ஆயிரங்கள் பென்ஷன் உண்டாம்

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. it is not goog what about judge child where they studyed private or govt school

    ReplyDelete
  11. Nalla theerpu.. This is example for all.. Tamilnadu laum vantha teaching IPA irukratha Vida better ah irukkum.. Govt job venum ana childrens ah private LA padikka vepangala.. Ellarkum ithey than, even nan govt job ponalum enakum athey than.. Helmet Ku case pota mathiti ithukum our case potta ellarkum nallathu..

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. Hats off to the honourable judge... !!!

    ReplyDelete
  14. god appo appo display aketu poraru frds..
    superrrrrrrr algabath court.... well
    all is well.....

    ReplyDelete
  15. god appo appo display aketu poraru frds..
    superrrrrrrr algabath court.... well
    all is well.....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி